search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை"

    • நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    • டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (55). இவர் பெரியார் வீதியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கு சரியான வேலை அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று தனது நகைப்பட்டறையில் சரவணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வேண்டி பாளையம் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது இரண்டாவது மகன் ஆனந்தராஜ் (27), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    குடிப்பழக்கம் இருந்துள்ளது. எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் சுற்றி திரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஆனந்த ராஜ் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதைக்கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களாக ஆனந்தகுமார் சோகத்துடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த ஆனந்தராஜ் பிரியாணி மற்றும் சிக்கன் கொண்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து உள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது, தனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை. எனவே எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் நலக்குறைவால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா கல்லரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் சத் தியமூர்த்தி (வயது 28), திருமணம் ஆனவர்.

    இவர் திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இவருக்கு கடன் தொல்லையும், உடல் நலக்குறைபாடும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலை மகள் கைவிட மறுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள அருணகிரிபேட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், காதலித்தவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மகள் கூறியுள்ளார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியடைந்த ஏழுமலை கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து, வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக் குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை.
    • நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார்.
    • சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (49).

    சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தனது மனைவியிடம் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் சீரங்கன் தனது மருமகன் அருண்பாண்டியனுக்கு போன் செய்து, வீட்டிற்கு அருகில் உள்ள ஊஞ்சகாட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதாக கூறி

    யுள்ளார்.

    இதனையடுத்து அங்கு சென்ற அருண்பாண்டியன், சீரங்கனை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கோட்டூரை சேர்ந்தவர் சதுரகிரி (வயது70). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் சென்று சதுரகிரி மாத்திரைகளை வாங்கி வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உற வினர்கள் அவரை தேடி ப்பார்த்தனர். அப்போது விருதுநகர் பழைய ரெயில்வே காலனி பிளாட்பாரத்தில் சதுரகிரி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கருவேல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55).மண்பாண்ட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்துள்ளது.

    இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் வயிற்று வலி சரியாக இல்லை. இதனால் விரட்டியில் இருந்த ராமலிங்கம் கடந்த பத்தாம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதனைக் கண்ட அவரது மகன் அண்ணாமலை தந்தை மீட்டு சிகிச்சையாக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுக்கு இதுகுறித்து அணுகாவூர் போலீஸ் சர்வீஸ் சென்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • குடிப்பழக்கத்திற்கு ஆளானதை கணவர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அமராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குப்பன் (வயது 30). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மகள் சுகந்தி (25) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

    இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (5), சூரியா (2) என நான்கு பிள்ளைகள் உள்ள னர். கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவர் மீண்டும் கண்டிதுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுகந்தி நேற்று முன்தினம் மதுவில் கொக்கு மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது தாய் மல்லிகா அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தளபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்.இவரது மனைவி ஆர்த்தி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    கடந்த 9-ந்தேதி இதே போல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஆர்த்தி விஷம் குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தானநிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி 7 வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஏ.எஸ்.பி.அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

    • முருகேஷ் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிபாறையை சேர்ந்தவர் ஹென்டி. இவரது மகன் முருகேஷ் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 29-ந் தேதி முருகேஷ் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது. இதனை கூலிவேலை செய்து வரும் தனது தாய் , தந்தையிடம் எப்படி கேட்பது என நினைத்தார்.

    இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தங்களது மகனை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முருகேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×