search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
    X

    முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

    • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கோட்டூரை சேர்ந்தவர் சதுரகிரி (வயது70). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் சென்று சதுரகிரி மாத்திரைகளை வாங்கி வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உற வினர்கள் அவரை தேடி ப்பார்த்தனர். அப்போது விருதுநகர் பழைய ரெயில்வே காலனி பிளாட்பாரத்தில் சதுரகிரி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(57). குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த இவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×