search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
    • பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 5.1.2024-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி இன்று 21.07.2023 முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

    தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, இப்பணியை விரைவாக நடத்தி முடிக்க பொது மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
    • கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் ஜனவரி 5-ந் தேதியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆண்களும், 15 லட்சத்து 51 ஆயிரத்து 421 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 558 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரையிலான காலத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியினை புதிய செயலி மூலமாக பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்திடவும், திருத்தங்கள் இருப்பின் மாற்றம் செய்திடவும் புதிய செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக வாக்காளர்களின் விவரங்களை புதிய செயலி மூலமாக விண்ணப்பம் செய்திடவும், இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கள சரிபார்ப்பு செய்து, அங்கீகரிக்கவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் வீட்டிற்குக் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை- சீதையம்மாள் கல்லூரியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணி நடத்தினர். துணை முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலையில் வட்டாட்சியர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். துணை வட்டாட்சியர் ராஜா முகமது பங்கேற்றார். நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து பேரணியாக மதுரை ரோடு, அண்ணா சிலை, காந்தி சிலை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்-பேராசிரியர்கள் கார்த்திகேயன், நாகராஜன், மாரிக்கண்ணு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இதில்

    300-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
    • மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அவர் தெரிவித்ததாவது:

    சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப்படி வங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) எம்.ஜி.சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அதன்படி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,13,085 ஆண், 1,19,375 பெண், மற்றவர்கள் - 6 என மொத்தம் 2,32,466 வாக்காளர்களும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,19,092 ஆண், 1,25,110 பெண், 30 மற்றவர்கள் என மொத்தம் 2,44,232 வாக்காளர்களும் உள்ளனர்.

    நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,22,835 ஆண், 1,31,964 பெண், 47 மற்றவர்கள் என மொத்தம் 2,54,846 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,778 ஆண், 1,14,976 பெண், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,20,762 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,11,712 ஆண், 1,18,421 பெண், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,30,179 வாக்காளர்களும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,23,193 ஆண், 1,29,465பெண், 55 மற்றவர்கள் என மொத்தம் 2,52,713 வாக்காளர்களும் உள்ளனர்.

    இதன்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,95,695, பெண் வாக்காளர்கள் 7,39,311, மற்றவர்கள் 192 வாக்காளர்கள் என நிகர வாக்காளர்கள் 14,35,198 பேர் உள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260, சேந்தமங்கலம் -284, நாமக்கல் -289, பரமத்தி வேலூர்-254, திருச்செங்கோடு- 261 மற்றும் குமாரபாளையம்-279 என மொத்தம் 1627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 24,090 வாக்காளர்கள் சேரக்கப்பட்டு உள்ளனர். 19,845 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்பட்டு, இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை தொடர் திருத்த முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

    31-12-2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டுகளில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். இணையதளம் முலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இதுவரை இணைத்துக் கொள்ளாதவர்களும் இந்த செயலியை பயன்படுத்தி இணைக்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
    • அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.

    அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,

    சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வலிமையான பூத் என்ற நிகழ்ச்சிக்கு உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மாவட்ட தலைவர் சித்ராங்தன் ஆலோசனைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 60 பூத் கமிட்டிகளிலும் கிளை தலைவர்கள் மூலம் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு பூத்திருக்கும் 5 பேர் நியமனம் செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தெற்கு மண்டலத்தில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, கே.டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி, தங்கமாள்புரம் மேல்நிலைப்பள்ளி, புதிய துறைமுகம் மேல்நிலைப்பள்ளி,தெர்மல் நகர் காமராஜர் பள்ளி, குழந்தை இயேசு துவக்க பள்ளி உட்பட 17 வாக்குசாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,முகாமில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    வலிமையான பூத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில்,தெற்கு மண்டல தலைவர் மாதவன்,மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கிருஷ்ணன், ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டனர்.

    இதில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி,துணை தலைவி சிலம்பொலி,அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தெற்கு மண்டல தலைவி சுமித்ரா, பொதுச் செயலாளர் பிரபு, துணைத்தலைவர் பொய்சொல்லலான், வர்த்தகப் பிரிவு தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாரிராஜ்,செல்லப்பன் சக்திகேந்திர, பொறுப்பாளர்கள் துர்க்கையப்பன் ,முத்துகிருஷ்ணன், பாலகுமார், முனியசாமி, செல்வம் , பலவேசம், முகேஷ் குலசை ரமேஷ், அருண்பாபு, ராஜ்குமார், விக்னேஷ், தீபன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    திருப்பூர் : 

     திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1.1.2023-நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட காலஅட்டவணைப்படி 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில்திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

    மேலும், எதிர்வரும் சிறப்பு முகாம் நாட்களில் ஜனவரி 1ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆண்டின் ஏப்ரல் 1ந் தேதி, ஜூலை 1ந் தேதி, அக்டோபர் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் (அடுத்தாண்டில் தகுதி நாள் அடையும்) சேகரிக்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் துவக்கத்தில் (ஏப்ரல், ஜூலை, அக்டோபர்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, கீழ்க்கண்ட படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கபடிவம் 6,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கபடிவம் 6B,வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யபடிவம் 7,ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய /ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளபடிவம் 8 விபரங்களை திருத்தம் செய்யபொதுமக்கள் Www.nvsp.in என்ற இணையதளம்மூலமாகவும், Voter HelplineApp என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் . இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
    • அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆபிரகாம் பேசியதாவது:-

    வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் உள்ள சந்தேகங்கள், சிரமங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதி அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    மேலும் 17 வயது முடிவுற்றவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பி க்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம்-7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்கு ச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சைமாவ ட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெ ற்றது.

    அதே போல் வருகிற 26, 27-ந்தேதிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
    • 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.

    • வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
    • புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

    கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

    தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.

    வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×