search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவு ரைப்படி 01-01-2024 ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திரு த்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்ட ரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தினங்களில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஏராள மான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இளையான்குடி ஒன்றி யத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    இதில் முன்னாள்

    எம்.எல்.ஏ. சுப மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகீம், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு பார்வையிட்டார்
    • சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்டஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில்புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பார்வையாளர் நம்பி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் இந்த சிறப்பு முகாம்களுக்கு சென்று புதிய வாக்காளர் சேர்ப்பு பணியினை பார்வையிட்டனர்.

    கவுன்சிலர் சுஜா அன்பழகன், மாவட்ட தி.மு.க. அணிகளின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், பொன் ஜான்சன், தமிழன் ஜானி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், அக ஸ்தி யலிங்கம், தாமரை பிரதாப், கிருஷ்ண குமார், தாமஸ்ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட வைகளுக்கு ஏராளமா னோர் வி ண்ண ப்பம் அளி த்தனர்.

    • 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவர்களை புதிதாக சேர்க்கும் பணி நடந்தது.
    • மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கொந்தகை, ஓலைப்பாடி, துரும்பூர், ஆதனூர், திரு வைகாவூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், மேலகபிஸ்தலம், சத்தியமங்கலம், கபிஸ்தலம் சருக்கை, உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கோவிந்தநாட்டு சேரி, உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவ- மாணவிகளை புதிதாக சேர்த்தலும், மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடைபெற்றது.

    இந்த சேர்த்தல் நீக்கல் முகாம் பணிகளை அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் மலர்மன்னன், துணைத் தலைவர் முகமது கனி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஆகியோரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், இளைஞர் அணி விஜயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
    • ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வட்டம், பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கரை வட்டம் ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 2024 வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத் தத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பியவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்தல் தொடர்பான பணி கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்கா ளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கு 5.11.2023 மற்றும் 18, 19-ந் தேதி ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    அதனைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக வும் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் ஸ்ரீதரன் மாணிக்கம், பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், முருகன், ரமணிரோஸ், ஏசு ரெத்தினராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நலிந்த கழக மூத்த முன்னோடிகள் 24 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கிய கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாற்றுதல் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மற்றும் அதிக அளவில் கலந்து சிறப்பித்த இளைஞர்களுக்கும், ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 104 வாக்கு சாவடி மையங்களிலும் கழகத்தால் நியமிக்க பட்டிருக்கும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி.எல்.ஏ.-2, வாக்குச்சாவடிபாக முகவர்கள் குழு உறுப்பினர்கள் பி.எல்.சி., ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறு ப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் முழு அளவில் பணியாற்றி அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்க ளை வாக்காளர்க ளாக சேர்க்கும் பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதி தொண்டர்களுக்கு அறிவுரை
    • தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோ வில் மாநகராட்சி மேயரு மான மகேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டி யலை திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணை யம் வெளி யிட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில் மற்றும் குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி களிலும் கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்கா ளர்களைச் சேர்க்க வும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை), 18-ந்தேதி (சனிக் கிழமை), 19-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) ஆகிய 4 நாட்க ளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர், ஒன்றிய, நகர் பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வா கிகள் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்களை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலுடன் இணைப்பு போன்ற பணி களை சிறப்பாக மேற் கொண்டு தகுதயுள்ள வாக் காளர்கள் விடுபட்டு விடா மல் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    • திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள் ளன. 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறம்பிய தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் தாலுகா அலுவல கங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க லாம்.

    தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலியின் மூல மாகவும் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க லாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற் றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி களையும் மேற்கொள்ளலாம்.

    பணிக்கு செல்வோரின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

    • அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
    • நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதின்று வெளியிட உள்ளது.

    அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும்-திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுயிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.

    நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 1-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
    • விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 1-1-2024 -ஐ தகுதி நாளாகக் கொண்டு தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, அனைத்து திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அத்துடன் வாக்குச்சாவடிகளை பிரிப்பது, இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.

    முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

    இப்பணியினை சிறப்பாகவும் விரைவாகவும் முடித்து தூய வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை
    • இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    தி.மு.க.வின் குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 1.1.2024-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத் தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள் ளது. கன்னியா குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேற்று முதல் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்க்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 1.1.2024-ல் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்க ளையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டும்.

    வாக்காளர் சேர்க்கும் பணியின் போது தி.மு.க. வின் சார்பாக தொகுதி வாரியாக நியமிக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-BLA2 க்கள் தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவ லர்கள்- BLO க்களுடன் இணைந்து மேற்கண்ட வாக் காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணி மற்றும் சிறப்பு முகாம்களில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×