search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபட்டு விடாமல் பட்டியலில் இணைக்க வேண்டும்
    X

    தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபட்டு விடாமல் பட்டியலில் இணைக்க வேண்டும்

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதி தொண்டர்களுக்கு அறிவுரை
    • தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோ வில் மாநகராட்சி மேயரு மான மகேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டி யலை திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணை யம் வெளி யிட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில் மற்றும் குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி களிலும் கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்கா ளர்களைச் சேர்க்க வும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை), 18-ந்தேதி (சனிக் கிழமை), 19-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) ஆகிய 4 நாட்க ளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர், ஒன்றிய, நகர் பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வா கிகள் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்களை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலுடன் இணைப்பு போன்ற பணி களை சிறப்பாக மேற் கொண்டு தகுதயுள்ள வாக் காளர்கள் விடுபட்டு விடா மல் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×