search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

    • ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    • திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள் ளன. 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறம்பிய தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் தாலுகா அலுவல கங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க லாம்.

    தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலியின் மூல மாகவும் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க லாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற் றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி களையும் மேற்கொள்ளலாம்.

    பணிக்கு செல்வோரின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×