search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "names"

    • 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவர்களை புதிதாக சேர்க்கும் பணி நடந்தது.
    • மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கொந்தகை, ஓலைப்பாடி, துரும்பூர், ஆதனூர், திரு வைகாவூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், மேலகபிஸ்தலம், சத்தியமங்கலம், கபிஸ்தலம் சருக்கை, உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கோவிந்தநாட்டு சேரி, உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவ- மாணவிகளை புதிதாக சேர்த்தலும், மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடைபெற்றது.

    இந்த சேர்த்தல் நீக்கல் முகாம் பணிகளை அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் மலர்மன்னன், துணைத் தலைவர் முகமது கனி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஆகியோரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், இளைஞர் அணி விஜயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கணவன்-மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கேரள ஐகோர்ட் நீதிபதி குழந்தைக்கு பெயர் சூட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. #KeralaHighCourt #ChildName
    கொச்சி:

    கேரள ஐகோர்ட்டுக்கு ஒரு ருசிகரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் பிறந்த 2-வது குழந்தைக்கு பெயர் சூட்டும் தகராறு தொடர்பான வழக்கு அது.

    கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் இருக்கிறது.

    குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது. அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

    குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  #KeralaHighCourt #ChildName
    ×