search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளைகாப்பு"

    • கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    டெல்லியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் புதுவை கடற்கரை சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் அடிக்கடி வந்து பொருள் வாங்கிய புதுவை லாஸ்பேட்டை சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண்ணுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.

    இதனை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவித்ராவை கணேஷ் திருமணம் செய்து கொண்டார்.தற்போது பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆதரவற்ற இவர்களுக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஏழ்மை நிலையில் இவர்கள் வாடி வருகின்றனர்.

    இதனை அறிந்த கடற்கரையில் வியாபாரம் செய்யும் சக வியாபாரிகள் பவித்ராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து அந்த வளைகாப்பை கடலோர சாலையில் சிறப்பாக நடத்தினார்கள்.

    மேலும் வளைகாப்பின் போது ஒரு பெண்ணிற்கு தாய் வீட்டில் இருந்து என்னென்ன சீதனங்கள் செய்வார்களோ அந்த சீதனங்களான பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், மற்றும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், என 9 வகையான சாதங்களுடன் பவித்ராவுக்கு வளைகாப்பை சக வியாபாரிகள் செய்து வைத்தனர்.

    மேலும் வளைகாப்பின் போது கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.

    ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்த சாலையோர வியாபார நிறைமாத கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சி கூட்டரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர் பூங்குழலி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி, சரஸ்வதி உள்பட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் மருதாடு, கடைசிகுளம், கல்லாங்குத்து, வழூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 106 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

    விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் தலைமை தாங்கினார். சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வீரராகவன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கம் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட அலுவலர் கே.அபிராமி வரவேற்றார்.

    திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணி வேந்தன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல். ஏ. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

    விழாவில் நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தி.மு.க. ஒன்றியச் செயலா ளர்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மனமகிழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்–துறை ஒருங்–கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராவூரணி என்.அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பேராவூரணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனாரெட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியும் விழா நடைபெற்றது. பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தராஜன் பேசியதாவது:-

    கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனமகி ழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றார். தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக சேதுபாவாசத்திரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார்.

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.

    • 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது
    • 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு, 160 கர்ப்பிணிகளுக்கு 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் க.அன்பரசி, வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ம.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
    • அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.

    இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

    மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

    அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.

    முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.

    பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

    பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    • சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    கர்ப்பிணி பெண்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அட்சதை தூவி வாழ்த்தினார்.

    சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    விழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள். மற்றும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசுகையில், வளைகாப்பு என்பது பண்டைய தமிழர் சடங்கு மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் சடங்கு ஆகும்.

    ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஏழை, எளிய பெண்களுக்கு வளைகாப்பு நடத்த வசதி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப் படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்த வேண்டும் என 2013-ம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமுதாய வளைகாப்பு விழா இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மகிழ்ச்சியும், மன அமைதி யும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த சமுதாய வளைகாப்பு விழா சிறந்ததாக உள்ளது. என்றார். இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வ மணி, கோபி, செந்தில்குமார், சேதுபதி, விளார்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விழாவிற்கு மாவட்டகலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரகவளர்ச்சித்துறை திட்டஅலுவலர்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் வரவேற்றார்.

    அமைச்சர் பி.மூர்த்தி விழாவை தொடங்கி வைத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இந்தவிழாவில் வட்டாட்சியர் வீரபத்திரன், செயல்அலுவலர் சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், துணைத் தலைவர்கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், ஒன்றியசெயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், கூட்டுறவு வங்கி இயக்குனர் பங்களா சி.மூர்த்தி, எல்.எஸ். அய்யாவு, ஜி.பி.பிரபு, அரவிந்தன் உட்பட பலர்கலந்துகொண்டனர்,

    இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு 5வகையான உணவுவழங்கப்பட்டது. முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றிகூறினார்.

    • வளைகாப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார்.

    இதில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். மேலும், வருவாய்த்துறை சார்பில், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.36 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகைகளையும், 65 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 215 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 33ஆயிரத்து 215 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசுகையில், ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

    வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மை யும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டம் இந்த வளைகாப்பு திட்டம் ஆகும்.

    சாதி, மத வேறுபாடின்றி கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

    விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநாவலூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா பா.கில்லனுர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ஏழுமலை. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு அம்சலேகா என்ற மனைவியை திருமணம்செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பாபு ஏழுமலையின் சகோதரிக்கு வளை காப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த நிலையில் பாபு ஏழுமலை அம்சலேகாவிடம் எனது சகோதரிக்கு வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அம்சலேகா, நான் ஏன் செய்ய வேண்டும், நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துள்ளார். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து வேறு பாட்டை ஏற்படுத்தியது.

    அம்சலேகாவை பாபு ஏழுமலை திட்டி அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அம்சலேகா மன வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் பாபு ஏழுமலை வெளியில் சென்ற போது வீட்டின் பின்புறம் வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு அம்சலேகா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாபு ஏழுமலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×