search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுதாய வளைகாப்பு விழா
    X

    சமுதாய வளைகாப்பு விழா

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×