என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சி கூட்டரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர் பூங்குழலி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி, சரஸ்வதி உள்பட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் மருதாடு, கடைசிகுளம், கல்லாங்குத்து, வழூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 106 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் தலைமை தாங்கினார். சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வீரராகவன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கம் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட அலுவலர் கே.அபிராமி வரவேற்றார்.
திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணி வேந்தன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல். ஏ. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
விழாவில் நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தி.மு.க. ஒன்றியச் செயலா ளர்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்