என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளர்ப்பு நாய்"
- ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம்.
- சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது.
திருப்போரூர்:
சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி. என்ஜினீயரான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ஹரிக்கு வீட்டில் குட்டியில் இருந்தே வளர்த்து வரும் "ரூபி" என்ற நாய் மீது அதிக பாசம் உண்டு. வெளியூர் சென்றால் கூட நாயை உடன் அழைத்து சென்று வந்தார். ஒரு நாள் கூட ஹரியும், அவரது குடும்பத்தினரும் வளர்ப்பு நாயை விட்டு பிரியாமல் இருந்தனர்.
இந்தநிலையில் ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம். அப்போது அவர் தனது செல்லபிராணி ரூபியையும் சைக்கிளில் அழைத்துசென்று வருவது சவாலாக இருந்தது.
கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இ.சி.ஆர். சாலையில் தனது சைக்கிளின் பின்பக்கம் அமரவைத்து அழைத்து செல்லும் ரூபி எங்கு கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுமோ என்று ஒவ்வொரு முறையும் பயந்தார்.
இதையடுத்து இணையதளத்தில் ஜெர்மன் நாட்டு குறும்படம் ஒன்றில் அங்கு சைக்கிளிங் செய்பவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வண்டியை சைக்கிளுடன் இணைத்து வளர்ப்பு நாயை சைக்கிளிங் அழைத்து செல்வதை ஹரி பார்த்தார். உடனடியாக அவர் ஆன்லைன் மூலம் ஜெர்மன் நாட்டில் இருந்து அந்த பிரத்யேக வாகனத்தை வரவழைத்தார். இதற்காக அவர் ரூ.25 ஆயிரம் செலவும் செய்து உள்ளார்.
தற்போது ஹரி தனது வளர்ப்பு நாய் ரூபியை பிரத்யேக வாகனத்தில் அமர வைத்து அதனை தனது சைக்கிளில் பொருத்தி அழைத்து சென்று வருகிறார். அதில் சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது. இந்த சிறப்பு வாகனத்தில் மழை, வெயில் படாதவாறு தடுப்பும் உள்ளது. குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ப்பு நாயை பராமரித்து வரும் ஹரியின் பாசபிணைப்பினை பொதுமக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
- நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
- கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.
இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.
இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.
எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- பேபி தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.
- பேபிக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.
நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே குதிரை கொம்பாக மாறிவிடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பெண்கள் இருக்கும் நகையை பாதுகாத்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
இந்த நிலையில் பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.
சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த நகையை காணவில்லை. பதறி போன அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார்.
எங்கு தேடியும் நகையை காணவில்லை. வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. நகையும் படுக்கை அறையில் உள்ள கண்ணாடி முன்புதான் இருந்தது. அதன்பிறகு நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் பேபி குழம்பி போனார்.
அப்போதுதான் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.
இதை பார்த்த பேபிக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் கணவரிடம் இதுபற்றி கூற, அவர் நாயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். இதில் நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரியவந்தது.
உடனே நாய்க்கு பேதி மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது எங்கேயும் வெளியே சென்றுவிடாமல் வீட்டில் இருந்தோர் கண்காணித்தனர்.
மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்தது. அதன்பின்பே பேபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நிம்மதி வந்தது.
ஆமாம் 3 பவுன் நகையின் இன்றைய விலை ரூ.1¼ லட்சத்துக்கும் அதிகம்தானே...
- பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது.
- பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது.
ஓசூர்,
கிருஷ்ண கிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே தனியாருக்கு சொந்த மான ஒரு சிற்ப கலைக்கூடம் உள்ளது. இங்கு, நேற்று ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது.
இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது பாம்பை பார்த்த சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஒன்று, அதனை கடித்தது.
அப்போ து, பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது. இதில் பாம்புக்கும், நாய்க்கும் ஆக்ரோஷ சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது. நீண்ட நேரம் பாம்பை நாய் கடித்து குதறியதால், சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கேயே உயிரிழந்தது.
பாம்பு உயிரிழந்த பின்புதான், அந்த நாய் சமாதானமடைந்தது. இந்த சம்பவம் காரணமாக,. சிற்பக்கூடத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும்,அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும் அச்சம் விலகாமலேயே காணப்பட்டனர்.
- ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
- தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
+2
- வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும்.
- சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது.
நாகர்கோவில்:
திருமணம் ஆயிரம் காலத்து பயிர்.
திருமண பந்தத்தில் இணையும் பெண், திருமணம் முடிந்ததும் கணவர் வீட்டிற்கு வாழ செல்வது வழக்கம். அப்படி புறப்படும் பெண்ணை, உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி வழி அனுப்பி வைப்பார்கள்.
பிறந்தது முதல் பெற்றோர் வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண், திடீரென கணவர் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் போது அவரை வளர்த்த பெற்றோர் கண்களில் இருந்து அவர்களை அறியாமல் கண்ணீர் வடியும். இதனை ஆனந்த கண்ணீர் என்றும் கூறலாம். பெற்ற மகளின் பிரிவை தாங்க முடியாமல் ஏற்படும் துயரம் எனவும் கூறலாம்.
ஒவ்வொரு திருமண வீடுகளிலும் இந்த நிகழ்வை பார்க்கலாம். அப்போது மணப்பெண்ணின் தாய் ஒருபக்கம் அழ, மறுபக்கம் தந்தை யாருக்கும் தெரியாமல் கண்ணை கசக்கி கொண்டிருக்க, உடன்பிறந்தவர்கள், சகோதரியை கட்டிப்பிடித்து அழ இந்த காட்சிகள் கூடி நிற்போரை கலங்க வைக்கும்.
இதனை கண்டு மணப்பெண்ணும் கண்கள் பனிக்க கணவனோடு புறப்பட்டு செல்வார். நாகர்கோவிலை அடுத்த சித்திரை மகராஜபுரம் பகுதியை சேர்ந்த சுயம்பு செல்வன் என்பவரது வீட்டு திருமணத்தில் மணப்பெண் கணவர் வீட்டுக்கு புறப்பட்ட போது அவர் வளர்த்த நாய் மணப்பெண் முன்பு நடத்திய பாச போராட்டம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.
வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும். சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் முடிந்தது. மாலையில் அவர் கணவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மணப்பெண் வளர்த்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அந்த நாயை அவிழ்த்து விட்டனர்.
உடனே அந்த நாய் ஓடி சென்று மணப்பெண்ணின் மீது தாவி, தாவி பாய்ந்தது. அவரும் நாயை செல்லமாக தடவி கொடுத்தப்படி இருந்தார். பின்னர் அவர் கணவருடன் புறப்பட தயாரானதும், அந்த நாய், மணப்பெண்ணின் முந்தானையை பிடித்தபடி அவரை விடமறுத்து அழுதது. மணப்பெண்ணின் குறுக்கும், நெடுக்குமாக நடந்து பிரிவை தாங்க முடியாத நிலையை உணர்த்தி காட்டியது. இது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ வைத்தது.
இந்த காட்சிகள் அனைத்தையும் திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
- தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
- நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார்(வயது39). தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.
வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது.
அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.
அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
- அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.
இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.
மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.
அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.
பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.
- காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் புதூர் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 52) விவசாயி. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் இவரது வீட்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து திருட முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவர் வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. பயத்தில் கதறியபடி நடுங்கிப் போன அந்த வாலிபர், ஆடாமல் அசையாமல் அங்கேயே அமர்ந்து விட்டார்.
அவரை நகர விடாமல் நாயும் அதே இடத்தில் அமர்ந்து அவரை கண்காணித்தபடி இருந்தது. இப்படியே, 2 மணி நேரம் ஆடாமல் அசையாமல் வாலிபர் உட்கார்ந்திருக்க, நாயும் அவரை பார்த்தபடியே இருந்தது. காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து இது குறித்து தகவல் அளித்தார். அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு வந்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர். திருடும் நோக்கில் வீட்டில் குதித்த அவரை நாயிடம் சிக்கி கடிபட்டதால் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.
திரைப்படத்தில் வருவது போல் சிப்பிபாறை ரக நாய் திருட வந்த நபரை 2 மணி நேரம் லாக் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
- சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
- வலியால் துடித்த சிறுவனை கண்டுக்கொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிஃப்டில் அழைத்து சென்றுள்ளார். அந்த லிஃப்டில் ஏற்கனவே சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.
அந்த சிறுவன் தனது இறங்கும் தளம் வருவதை அடுத்து, லிஃப்டின் கதவு அருகே வந்தான். அப்போது, அங்கிருந்த நாய் சீறிப்பாய்ந்து சிறுவனின் காலை கடித்துவிட்டது. இதனால் சிறுவன் வலியால் துடி துடித்து காலை உதறி கத்தினான். நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்