search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி"

    • சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள்
    கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்
    பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்,

    ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணி கண்டன்,
    ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சிமன்ற த்தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர்,
    ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

    • சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.

    மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
    • உயர்மட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணி கள் குறித்து, உயர் மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது.

    ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட் சிகள் ஊராட்சி கள். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவ ரத்துத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார் பில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும். முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற் ெகாள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் குறித்து கேட்ட றியப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு, கட்ட டம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம்மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி களை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அது குறித்து மாவட்ட நிர் வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த மோகன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் உட்பட அனைத் துத்துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, முது குளத்தூர், மண்டபம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-அனைத்து ஊராட்சி களிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங்களை தீர்மானித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் பணிகள் நடை பெறும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், பொது நிதியில் இருந்து எடுக்கப்படும் வேலைகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடிநீரில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க வாட்டர் மீட்டர் பொருத்த வேண்டும்.

    தெரு விளக்குகள் அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24 கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்க வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பணி முக்கியமான ஒன்றாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திறன் ரூ.24 ஆயிரத்து 790 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 790 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிதியாண்டு தொடங்குவதற்கு முன் உத்தேச கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி அடிப்படையில் இறுதி கடன் அறிக்கையை வங்கிகள் வெளியிடும். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் வருகிற 2023-24-ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்ட வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திறன் ரூ.24 ஆயிரத்து 790 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 63.43 சதவீதம் அதிகம். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் முன்னிலையில் நபார்டு வங்கியின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது.

    கலெக்டர் வினீத் வெளியிட, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 790 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.8 ஆயிரத்து 815 கோடியே 31 லட்சமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.13 ஆயிரத்து 417 கோடியே 21 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஏற்றுமதி கடன் வழங்க ரூ.682½ கோடியும், கல்விக்கடன் வழங்க ரூ.328 கோடியே ௯௫ லட்சமும், வீட்டுவசதிக்கு ரூ.357¾ கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.435 கோடியே 7 லட்சமும், மகளிர் குழுவினர் உள்ளிட்ட மற்ற துறையினருக்கு ரூ.708 கோடியே 19 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக உள்ளிட்டமைப்பு வசதிக்கு ரூ.45 கோடியே 9 லட்சம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
    • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது
    • அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலெக்டர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் நடை பெற்றது.

    கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது . குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் பழுதடைந்த சாலைகளை சீர மைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி யாக சாலைகளை செப்பனிட்டு போக்கு வரத்துக்கும் பொதுமக்க ளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவு றுத்தப்படுகிறது. அணைகளில் வரும் நீரின் அளவிற்கேற்ப தேவையான அளவிற்கு தண்ணீர் திறந்து விடவும், அதிகமான தண்ணீர் வரும் பகுதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை அமைக்கவும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), வருவாய்த்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவ மனை களையும் சுகாதார மாகவும் , தூய்மையாகவும் வைத்துக்கொள்வதோடு பொதுமக்கள் சிகிச்சை மேற்கொள்ளும் நோய்க ளுக்கு தேவையான மருந்து கள் இருப்பில் வைத்திருக்க வும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அதிக கனமழை பெய் தால் கடலில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவதோடு மீன்பிடிக்க சென்று ஏதேனும் மீனவர்கள் திரும்பவில்லை எனில் அதுகுறித்த அறிக்கை யினையும் மாவட்ட நிர்வா கத்திற்கு தெரிவிப்ப தோடு, அவர்கள் கரை சேர்வ தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், கடல ரிப்பு தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ளவும் மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை களிலுள்ள தெருவிளக்குகள் பழுது ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், மரங்களின் கிளைகள் உள்ளிட்டவைகள் ஏதேனும் இடையூறு இருந்தால் மரக்கிளை களை அகற்றவும், பொது மக்களுக்கு எவ்வித இடை யூறுமின்றி மின் இணைப்பு கள் தொடர்ந்து கிடைப்ப தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள மின்சா ரத்துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது .

    அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும் . அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிட்ட பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் பேசி னார். கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா , நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
    • 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.

    இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில், முதல் கட்டமாக 89 கிராம ஊராட்சிகளில் ரூ.32.42 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பிரவலூர் ஊராட்சியை அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் தன்னிறைவு அடையச் செய்வது குறித்தும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாகவும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளா்ச்சியில் தனிகவனம் செலுத்தி அனைத்து கிராமப்புற பகுதிகளையும், நகா்ப்புறப்பகுதிகளுக்கு இணையாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் பிற துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதல் கட்டமாக மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 89 கிராம ஊராட்சிகளில் நீர்நிலை புனரமைத்தல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 118 பணிகள் ரூ.958.44 லட்சம் மதிப்பீட்டிலும், குக்கிராமங்களில் தெருக்கள், வீடுகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 192 பணிகள் ரூ.752.93 லட்சம் மதிப்பீட்டிலும், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 21 பணிகள் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப்பயன்பாட்டு கட்டமைப்புக்களை உருவாக்குதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 105 பணிகள் ரூ.749.21 லட்சம் மதிப்பீட்டிலும், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.3242.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் தொடக்கமாக பிரவலூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் பிரவலூர் ஊராட்சியைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இந்த பகுதியில் கிடைக்கப்பெறும் கால்நடைச்சாணம், தென்னை, வாழை ஆகியக்கழிவுகளைக் கொண்டு எரிவாயு கலன் அமைப்பது குறித்தும், சுகாதார நாப்கின், பனைஓலைக்கூடை முடைதல், தையற்கூடம் போன்ற வைகள் தொடா்பாக பயிற்சி பெறுவது குறித்தும் மற்றும் பொதுமக்கள் எடுத்துரைத்துள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு பிரவலூர் ஊராட்சியை தன்னிறைவு அடைய செய்வதற்கான முன் மாதிரியான ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட அலுவலா்கள் விசாலாட்சி (வீடு, சுகாதாரம்), செல்வி (உட்கட்டமைப்பு), சிவகங்கை வட்டாட்சியா் தங்கமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், ரத்தினவேல், பிரவலூர் ஊராட்சி மன்றத்தலைவா் கவிதா மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

    • இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும் என ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பேசினார்.
    • போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, செய்யது அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் தலைமை தாங்கி இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளை ெதாடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. படித்து முடித்து வெளியே வந்து ஒரு இலக்கை பெறுவதற்கு நாம் படும் சிரமத்தை அளவிட முடியாது. அதனால் தான் படிக்கும்போேத ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் லட்சியம் என்ன? என்று திட்டமிட்டு செயல்பட்டு படித்தால் அந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடும்.

    இதே போல் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றி என்னும் இலக்கு உங்கள் அருகாமையில் உள்ளது.

    படிக்கும் காலத்தில் எதிர்காலத்தின் திட்டத்தை நினைத்து அதற்கேற்ப படித்து சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் சாதனை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், முகமது சதக் தஸ்தகீர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது அம்மாள் கல்லூரி வள்ளி விநாயகம், பரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமையில், வட்டார திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முன்னிலையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாரிமுத்து எம்.எல்.ஏ கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

    ெதாடர்ந்து, செல்வராசு எம்.பி கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பேரீட்சை பழங்கள் உள்பட 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும்போது, குழந்தையின் வளர்ச்சியானது கருவுற்ற திலிருந்து தொடங்குகிறது, தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமாக பிறக்கும். தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

    மேலும், வட்டார மருத்துவ அலுவலர் கௌரி கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டசத்து கண்காட்சி நடைப்பெற்றது, கர்ப்பிணிகளுக்கு புளிசாதம், காய்கறி சாதம், புலவு, லெமன் சாதம், வடை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்த்தி, ஊராட்சி தலை வர்கள் வீரசேகரன், ஜானகிராமன், மாலினி ரவிச்சந்திரன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன், உதவியாளர் மேனகா, சூபர்வைசர்கள் கமலா, காயத்ரிதேவி, ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழுந்தமாவடி அரசு பள்ளி 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை கொண்டதாகும்.
    • மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாகராஜன்.

    இவர் விழுந்தமாவடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகளாக தொழில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் இதே பள்ளியில் பயின்று தற்பொழுது ஓய்வு பெற உள்ள நிலையில் தான் பயின்ற மற்றும் பணிபுரிந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைத்த ஆசிரியர் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகம் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சுமார் 1.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி வருகிறார்.

    இன்னும் பத்து நாட்களில் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்தப் பணி தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போல் மாணவர்கள் தங்கள் பயின்று பல்வேறு துறைகளுக்கு சென்றாலும் தன் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆசிரியர் வேண்கோள் விடுத்தார்.

    ஆசிரியரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுலை தெரிவித்தனர்.

    ×