என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sequence"

    • கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமையில், வட்டார திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முன்னிலையில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாரிமுத்து எம்.எல்.ஏ கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

    ெதாடர்ந்து, செல்வராசு எம்.பி கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பேரீட்சை பழங்கள் உள்பட 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும்போது, குழந்தையின் வளர்ச்சியானது கருவுற்ற திலிருந்து தொடங்குகிறது, தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமாக பிறக்கும். தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.

    மேலும், வட்டார மருத்துவ அலுவலர் கௌரி கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டசத்து கண்காட்சி நடைப்பெற்றது, கர்ப்பிணிகளுக்கு புளிசாதம், காய்கறி சாதம், புலவு, லெமன் சாதம், வடை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்த்தி, ஊராட்சி தலை வர்கள் வீரசேகரன், ஜானகிராமன், மாலினி ரவிச்சந்திரன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன், உதவியாளர் மேனகா, சூபர்வைசர்கள் கமலா, காயத்ரிதேவி, ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பூ, பழம், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
    • தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத மச்சபுரீஸ்வரர் கோவிலில் 12ம் ஆண்டு வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலையில் கணபதிஹோமம், லெட்சுமிஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெண்கள் பூ புஷ்பம், பழ வகைககள், பட்டு வஸ்திரங்கள் உள்பட சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோயில் வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    ×