search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசதிகள்"

    • அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
    • தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

    அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

    அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

    அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.

    அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

    மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

    • தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
    • சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் "சதய விழா"வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

    அதன்படி நாளை தொடங்கும் விழா நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் தஞ்சை மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மேயர் சண். ராமநாதன் கூறியதாவது :-

    தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட , இந்த ஆண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாலை வசதி, குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் வந்தாலும் அதற்கேற்றவாறு பல்வேறு வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 3 -ம் தேதி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.
    • தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1945 முதல் கால்நடைச்சந்தை நடந்து வருகிறது. தென்னம்பாளையத்தில் நடந்து வந்த மாட்டுச்சந்தை தற்போது அமராவதிபாளையத்தில் நடந்து வருகிறது.வாரம் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஆயிரம் முதல் 1,500 மாடுகள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை விலை பேசி வாங்க 2,500 பேர் வருகின்றனர். கேரளாவில் இருந்தும் திருப்பூருக்கு வியாபாரிகள் வருகின்றன்ர. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் நம்பியே சந்தை நடக்கிறது. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4மணி வரை திருவிழா போல சந்தை நடக்கிறது. குறைந்தபட்ச விலை 3,000 ரூபாய் துவங்கி, அதிகபட்சம், 55 ஆயிரம் வரை மாடுகள் விலை போகிறது. காங்கயம் காளைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும்.

    சந்தைக்கு 800 முதல் ஆயிரம் கால்நடைகள் கொண்டு வரப்படுவதால் குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2019ல் 50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.

    அரை நூற்றாண்டு கடந்தும் செயல்பட்டு வரும் இச்சந்தைக்கு பல்வேறு மாநிலத்தவர் வந்து செல்ல தேவையான அனுமதி, போக்குவரத்து வசதி அமைந்தால், திருப்பூரில் கால்நடை வணிகம் மேலும் சிறக்கும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    கால்நடை விலை நிர்ணயத்துக்கு குழுவெல்லாம் கிடையாது. விவசாயி - வியாபாரி அல்லது இரு வியாபரிகள் இடையே நடக்கும் ஒரு நிமிடம் பேரம் மட்டுமே விலை. படிந்து விட்டால் விலையை கொடுத்து மாட்டை கயிறுடன் அவிழ்த்து லாரியில் ஏற்றிவிடுவார்கள். சுவராசியமான வாக்குவாதங்களும் நடக்கும். 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை சர்வசாதாரணமாக சட்டை, டவுசர் பாக்கெட்டில் வியாபாரிகள் பணம் வைத்திருப்பார்கள்.   

    • 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து காய்கறிகளை வண்டிகளில் ஏற்றி வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட புதுமந்து பகுதியை அடுத்து முருகன் கோவில் மேடு பகுதி உள்ளது. இங்கு சுமார் 37 குடும்பங்கள் வசித்து வருகின்றன, எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் தினமும் அப்பகுதி மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி தலைவரும், வார்டு கவுன்சிலரும், 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மெயின் ரோட்டில் இருந்து முருகன் கோவில் மேடு பகுதிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும். சாலை வசதி கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, ஓரு சில வீடுகளில் மட்டும் மின்சாரம் வசதிகள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகளும் இந்த வழியாக பயணிப்பதால் பெரும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் விவசாயம் செய்து வருகின்றன.மற்றும் காய்கறிகளை தோட்டத்தில் இருந்து தலை சுமையாக 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து வண்டிகளில் ஏற்றி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தொட்டபெட்டா ஊராட்சியும் இதனைகண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பணி பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவ–மனையில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ நாகைமாலியுடன் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான்சிம்சன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின் ராசரத்தினம், ஏ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

    அப்போது, கடந்த ஆட்சியின் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 11 ஆண்டுகளாக பழிவாங்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முதுநிலை பட்டியலின்படியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமலும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டும் கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடன் உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழியாக நிரப்பிட உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணிவிதி வெளியிட வேண்டும்.

    இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரம் சாலை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.
    • ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியே 30 லட்சத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை யை பலப்படுத்தும்பணி நடைபெற்றது.

    இத்திட்ட த்தின் கீழ் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் ஆதனூரில் 2 கிலோ மீட்டரும், கோடியக்கரை- வேதாரண்யம் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரமும் சாலையை மேம்படுத்தம் பணி நடைபெற்றது.

    இப்பணியை வேதாரண்யம் உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் மதன், சாலை ஆய்வாளர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரை சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம் உட்கோட்டத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல், வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ரூ. 2 கோடி 30 லட்சத்தில் 3 கி.மீட்டர் தூரத்தில் தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளன.

    • நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கோடியக்க ரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இக்காலத்தில் நாகை, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு மினி வேன்களில் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

    நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முன்கூ ட்டியே மீன்பிடி சீசன் காலம் தொடங்கியதால் வானகிரி, சின்ன மேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரை க்கால், மடவாய்மேடு, அக்கம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படகுகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    மீனவர்கள் வருகையால் களை இழந்து காணப்பட்ட கோடியக்கரை மீன் பிடிதளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    வெளியூ ரிலிருந்து வந்து தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோடி யக்கரை மீனவர்நல சங்க முன்னாள் செயலா ளர் சித்திரவேல் கூறியதாவது:-

    நடப்பாண்டு முன் கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியதால் அதிகளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளன.

    வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் கிராமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு மீன்பிடி சீசன் நன்றாக இருக்கும் என்றும் சுமார் ரூ. 200 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சான்றிதழ் கிடைக்க பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.
    • 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாவ ட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதற்கான சான்றிதழை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், லக்ஷயா மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவை மத்திய அரசு வழங்கும்.

    அதன் அடிப்படையில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளதால், சுமார் ரூ.35 லட்சம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதுபோல் மகப்பேறு அறுவை சிகிச்சை அறைகளை சிறந்த முறையில் பராமரித்ததற்காக நடத்தப்பட்ட லக்ஷயா ஆய்வின் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் அடிப்படையில் ஆண்டுதோறும் சுமார் ரூ.5 லட்சம் சிறப்பு நிதி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
    • பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் சாய் தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் அமை ந்துள்ளது.

    சாய்தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    ஸ்ரீஷீரடிசாய்பாபா கோவில் கும்பாபி ஷேகத்தை யொட்டி சிறப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டம் ஆர்வி கருணாநிதி அறக்கட்டளைதலைவர் தலைமையில் நடைபெற்றது.

    எல்.ராகவன் ஆடிட்டர் ஆர்வி ராஜே ந்திரன் செயலாளர் சிறப்புவிருந்தினர் செல்வி பாரதி அமைப்பாளர், டி.எ.ஸ்பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர். வி.கே. ராம் பிரசாத், பொருளாளர் வி.துரை மற்றும் லயன் அங்கை ராஜேந்திரன் உள்பட பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே கும்பாபிஷே கத்துக்கு வரும் பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது அவசியம்என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது.

    முன்னேற்பாடு கருதி 108 ஆம்புலன்ஸ், தீயணை ப்பு வாகனங்களைதயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    • தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அமர ஓய்வறை கூட இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள நவபாஷாண கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வழிபடுவதன் மூலம் தடைபட்ட திருமணங்கள், தோஷங்கள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜை செய்வது வழக்கம்.ஆனால் பக்தர்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய கோவில் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    கடலிற்குள் அமைந்து உள்ள இந்த நவக்கிரக கோவிலுக்குச் செல்லும் நடைபாதையில் பதிக்கப் பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியு மாக உள்ளது. நவக்கிரக சன்னதிக்கு கடலில் உள்ள தண்ணீரில் இறங்கி சுவாமி கும்பிட வேண்டி உள்ளதால் அங்கிருக்கும் படிகள் பாசி படிந்து காணப்படுகிறது.

    பாதுகாப்பிற்காக அறநிலையத்துறை சார்பில் எந்த பாதுகாப்பு ஏற்பாடு களோ, பாதுகாவலர்களோ இல்லாத நிலை உள்ளது. தண்ணீரின் அளவு சில நேரங்களில் அதிகமாக உள்ளதால் பெண்கள் உள்ளிட்டோர் இறங்கு வதற்கு தயங்குகின்றனர். பக்தர்கள் நவபாஷாண சிலை வழிபாட்டிற்கு செல்வதற்கு காலணிகளை நடைமே டை முன்பக்கத்திலேயே கழற்றி விட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அங்கு காலணிகளை பாதுகாக்குமிடம் கூட இல்லை. கழிப்பறைகள் மிக மோசமாக உள்ளது. வேறு வழியின்றி அதையே பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அமர ஓய்வறை கூட இல்லை. கடற்கரை ஓரமாக அம்மா பூங்கா ஒன்று இருக்கிறது. அதுவும் பூட்டப்பட்டு குப்பை நிறைந்து காணப்படுகிறது. அந்த பூங்காவை திறந்து பக்தர்கள் ஓய்வெடுக்க அனுமதித்தால் கூட பக்தர்களுக்கு சிரமம் நீங்கும். நவக்கிரக கோயிலுக்கு எதிர்புறத்தில் உள்ளசக்கர தீர்த்தம் மிகவும் பாசி படிந்து தெப்பத்திற்குள்ளேயே பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.

    கடற்கரைக்குள் குப்பை மரத்துாசிகள் நிறைந்துள்ளது. கடலில் சேருகின்ற குப்பைகளை அகற்றா விட்டால் மீன் போன்ற உயிரினங்கள் குப்பைகளை சாப்பிட்டு இறந்து போகும் நிலை உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் குப்பைகளும், குடிநீர் பாட்டில்களும் ஆங்காங்கே போடப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அறநிலையத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் உரியநடவடிக்கை எடுத்து கடற்கரையை பாதுகா ப்பதுடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் 29-வது வார்டு பகுதியில் மேயர், ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு எண்.29-ல் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரத்தினசாமிபுரம், நாராயணசாமிபுரம், அரிசிப்பாளையம், தம்மண்ணன் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு உள்ளதையும், போர்வெல் பழுது ஏற்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்த மேயர் உடனடியாக பழுதுகளை நிவர்த்தி செய்து அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிடவும், பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிதாக அமைக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்திடவும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் முறையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார்.

    சிலபகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்திடவும், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்திட வேண்டும் 

    • சேலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
    • சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு கலை கல்லூரி 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரி சேலத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த கல்லூரியில் கழிப்பிட வசதிகள், குடிநீர், சாக்கடை வசதி , பழுதடைந்த மின் விளக்குகள், மற்றும் கட்டிடங்கள் குறித்தும், புதிய பாடப்பிரிவுகள், கட்டிடங்கள், பேராசிரியர்கள் பணியமைப்பு ஆகியவைகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் குழு அமைத்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் புவனேஸ்வரி என்பவர் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதன் அடிப்படையில் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலகம் சேலம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைத்து கூட்டாய்வு மேற்கொள்வதுடன் அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன் அறிக்கையினை சமர்பிக்குமாறு சேலம் மாவட்ட கலெக்டருக்கு சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ×