search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுச்சந்தை"

    • வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர். 

    • வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
    • வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார்.

    காங்கேயம் :

    காங்கேயம் தாராபுரம் ரோட்டில் சக்திநகரில் காங்கேயம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வாராந்திர மாட்டுச் சந்தை அமைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சந்தையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் மகேஷ்குமார், தெற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கே. கே. சிவானந்தம், வடக்கு ஒன்றிய திமுக., செயலாளர் கருணை பிரகாஷ், பொத்தியபாளையம் பஞ்சாயத்து துணைத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
    • திங்கள்கிழமை முதல் பிரதிவாரம் தோறும் பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை காங்கேயம் நகராட்சி தாராபுரம் மெயின்ரோடு கவி ரெஸ்டாரண்ட் அருகில் வருகிற 19.6.2023 (திங்கள்கிழமை) அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

    வரும் 19.6.2023 (திங்கள்கிழமை) முதல் பிரதிவாரம் தோறும் பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை நடைபெற உள்ளது.மேலும் காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரியமிக்க மாட்டுச்சந்தைக்கு வாரம்தோறும் திங்கள்கிழமையன்று விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
    • கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

    திருப்பூர் :

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

    • மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், காங்கேயம்சந்தை ஏற்படுத்துதல் மற்றும் திருப்பூரில் பிரதிவாரம் திங்கட்கிழமை இயங்கி வரும் மாட்டுச் சந்தையின் கிழமையினை மாற்ற விவசாயிகளின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு காங்கேயம் நகராட்சியில் பிரதிவாரம் திங்கட்கிழமை அன்றும் மற்றும் திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரில் பிரதிவாரம்செவ்வாய்க்கிழமை அன்றும் மாட்டுச்சந்தைகள் நடைபெறும்.

    அதன்படி வருகிற 19.6.2023 (திங்கட்கிழமை) அன்று காங்கேயம் நகராட்சியிலும், 20.6.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரிலும் மாட்டுச் சந்தைகள் நடைபெறும். இதற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிற்கி ணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருப்பூர்மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருந்தொழுவு சாலை, அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் நடந்த மாட்டு சந்தையில் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டன.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் திருப்பூர் மாட்டு சந்தை களைகட்டியது. இந்த சந்தைக்கு மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் என சரக்கு வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.கடந்த வாரத்தை விட இந்த வாரம் கன்று குட்டியின் விலை குட்டியை பொறுத்து ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை போனது. மாடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரை விலை போனது. காலை 8 மணி முதலே வியாபாரிகள் சந்தைக்கு வர தொடங்கினர்.

    இதனால் பெருந்தொழுவு சாலையில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேரளாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.

    பொள்ளாச்சி, கோவை, மயிலாடுதுறை, கோபி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. 762 மாடுகளில் 53 மாடுகள் விற்பனையாகவில்லை. இதனால் கொண்டுவந்த மாடுகளை விவசாயிகள் திரும்ப அழைத்து சென்றனர். சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை.

    • 55 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
    • அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின.திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 55 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 35 மாடுகள் மொத்தம் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
    • திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

    தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.

    வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
    • மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம்காங்கயம் அருகே திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம்,மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெறும்.இதில் பழமை வாய்ந்த மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1000 ஆண்டுகள் பழமையான மாட்டுச்சந்தையும் நடைபெறுவது வழக்கம்.

    களை கட்டும் மாட்டுச்சந்தை

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி( புதன்கிழமை ) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த புதன்கிழமை முதல் மாட்டுச்சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு, வாங்கியும் செல்கின்றனர். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    10ம் நூற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு,வீர ராசேந்திர சோழனால் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தைப்பூச விழாவும், தினப்பூஜைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    மாடுகள் வரத்து அதிகரிப்பு

    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் உள்ள முருக கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோவிலும், இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

    கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது.மேலும் புதுக்கோட்டை ,திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள்வாங்க வந்துள்ளனர். இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேர்த்திக்கடன்

    இந்த ஆண்டு மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர். இங்கு 6 மாத இளங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் 1.25 லட்சம் வரையும்,ஒரு சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையும், இனவிருத்திக் காளைகள் 1 லட்சம் முதல் 1.60 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.இச்சந்தையை ஒட்டி கோவிலின் முன்பாக மாடுகளுக்கான கயிறுகள்,மணிகள்,குஞ்சம்,சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும்,மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோவில் முன்பாக மாடுகளுக்கு பூஜைகள் செய்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

    • சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.
    • ஏப்ரல் 18 ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கிவிட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. 2 ஆயிரம் மாடுகள் இது வரை விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.இதைத்தொடர்ந்து மாட்டு சந்தை கூடும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் மே 4-ந் தேதி நடைபெற உள்ளது. மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு இந்த மாதம் ஏப்ரல் 18 ந்தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது. இந்த மாட்டுச்சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 2ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து 3 தினங்களில் இன்னும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வரும்.. மாட்டுச்சந்தை இந்த மாத கடைசி வரை நடைபெறும் என்று கூறுகின்றனர்.

    இந்த மாட்டுச்ச ந்தையையொட்டி மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறு, தலை கயிறு, தும்பு கயிறு, சாட்டை, மாடு கட்டும் கயிறு, தும்பு கயிறு கடைகள் போட ப்பட்டி ருந்தன.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் சாட்டைகளை வாங்கி சென்றனர்.

    • பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது.
    • மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ கடையம் மாட்டுச்சந்தை மற்றும் பிற மாட்டுச்சந்தையையே பயன்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்டுச் சந்தை நடைபெறும் பகுதியின் அருகே இன்று முதல் புதிதாக மாட்டுச்சந்தை பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் நாள் மாட்டுச்சந்தை என்பதால் மாடுகளின் வரத்து மிகவும் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    பாவூர்சத்திரம் மாட்டுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் மாட்டுச்சந்தையானது தொடர்ந்து நடைபெறும் என கூறினர். இதனை பயன்படுத்தி மாடுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பயனடை யுமாறு கேட்டுக் கொண்டனர்.

    ×