search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kannapuram"

    • கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • வருகிற 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கண்ணபுரம் மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து 26-ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி மிகப்பெரிய கால்நடை சந்தை நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

    நேற்று காலை 7.30 மணிக்கு தோ் முகூர்த்தம் நடைபெறுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகா் வழிபாடு நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது.அதைத் தொடா்ந்து வருகிற 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது.

    5-ந் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி திருத்தோில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., கலெக்டா் வினீத், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலா் ராமநாதன், உதவி ஆணையா் அன்னக்கொடி ஆகியோா் செய்து வருகின்றனா்.

    • சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.
    • ஏப்ரல் 18 ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கிவிட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. 2 ஆயிரம் மாடுகள் இது வரை விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.இதைத்தொடர்ந்து மாட்டு சந்தை கூடும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் மே 4-ந் தேதி நடைபெற உள்ளது. மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு இந்த மாதம் ஏப்ரல் 18 ந்தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது. இந்த மாட்டுச்சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 2ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து 3 தினங்களில் இன்னும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வரும்.. மாட்டுச்சந்தை இந்த மாத கடைசி வரை நடைபெறும் என்று கூறுகின்றனர்.

    இந்த மாட்டுச்ச ந்தையையொட்டி மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறு, தலை கயிறு, தும்பு கயிறு, சாட்டை, மாடு கட்டும் கயிறு, தும்பு கயிறு கடைகள் போட ப்பட்டி ருந்தன.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் சாட்டைகளை வாங்கி சென்றனர்.

    ×