search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணபுரத்தில் களை கட்டும் மாட்டுச்சந்தை
    X

    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கான கயிறுகள். விற்பனைக்கு வந்துள்ள மாடுகள்.

    கண்ணபுரத்தில் களை கட்டும் மாட்டுச்சந்தை

    • சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.
    • ஏப்ரல் 18 ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கிவிட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. 2 ஆயிரம் மாடுகள் இது வரை விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.இதைத்தொடர்ந்து மாட்டு சந்தை கூடும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் மே 4-ந் தேதி நடைபெற உள்ளது. மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு இந்த மாதம் ஏப்ரல் 18 ந்தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது. இந்த மாட்டுச்சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 2ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து 3 தினங்களில் இன்னும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வரும்.. மாட்டுச்சந்தை இந்த மாத கடைசி வரை நடைபெறும் என்று கூறுகின்றனர்.

    இந்த மாட்டுச்ச ந்தையையொட்டி மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறு, தலை கயிறு, தும்பு கயிறு, சாட்டை, மாடு கட்டும் கயிறு, தும்பு கயிறு கடைகள் போட ப்பட்டி ருந்தன.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் சாட்டைகளை வாங்கி சென்றனர்.

    Next Story
    ×