search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flying force"

    • கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
    • மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

    மேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தணிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கொடிமலர் ஆகியோர் தலைமையில் தலைமை காவலர்கள் அலாவுதீன், கார்த்திக் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் மேலூரில் உள்ள தனியார் சிகரெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் சரவணன் என்பவர் சிகரெட் விற்பனை செய்து பல்வேறு கடைகளில் வசூல் செய்த ரொக்கம் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 400-ஐ கொண்டு வந்தது தெரியவந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் உத்தரவின் பேரில் அந்த பணம் சரி பார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
    • வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அவனியாபுரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பெருங்குடி சோதனை சாவடி அருகே பறக்கும்படை அதிகாரி மதுரைவீரன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் வந்தவர், அவனியாபுரம் காவேரி நகரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பதும், தே.மு.தி.க.வைச் சேர்ந்தவர் ரூ.1½ லட்சத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவனியாபுரம் பை-பாஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி அ.தி.மு.க.பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்ததோடு, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் புகார் செய்தார். அதன் பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் ரோந்து சென்றபோது பெருங்குடி தேவர் சிலை அருகே தி.மு.க.வினர் அனுமதியின்றி பேனர் மற்றும் கட்சிக்கொடி வைத்து பட்டாசு வெடித்ததாக புகார் தெரிவித்தார். அதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெற்குவாசல் மகால் ரோடு பகுதியில் உள்ள பள்ளி சுவற்றில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக பாண்டியன் கூட்டுறவு அண்ணா சங்கம் நிர்வாகிகள் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.1 கோடியே 42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ParliamentaryElections
    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 6 நிலையான கண்காணிப்புகுழுக்களையும், பறக்கும் படைகளையும் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி முதல் இதுவரை எந்த ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 43 லட்சத்து 57 ஆயிரத்து 540 மற்றும் 64 பட்டுச்சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டதில் 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.1 கோடியே 38 லட்சத்து 10 ஆயிரத்து 40 சம்பந்தப்பட்ட கருவூலகத்திலும், மேலும் 1076 மதுபாட்டில்களும், ஒரு ஏர்பிஸ்டல் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலந்தாவளம் நாச்சிபாளையம் ரோட்டில் குமிட்டிபதி பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர் கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், வெற்றிலை வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.53 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நீலாம்பூர் சோதனை சாவடி பகுதியில் செந்தில் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். வந்தனர். அப்போது சேலத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 133 பட்டுப்புடவைகள் இருந்தது. காரை ஓட்டிவந்த திருச்சூரைச் சேர்ந்த தேவதாசை விசாரித்த போது அவர் கொண்டுவந்த பட்டுப்புடவைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிய வந்தது.

    அதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் சூலூர் தாசில்தார் ஜெயராஜிடம் ஒப்படைத்தனர். கருமத்தம் பட்டியைச் அடுத்த பதுவம் பள்ளி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் தலைமையிலான தேர்தல் செலவினப்பார்வையாளர் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த பசூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரிடம் ரூ.84 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். #ParliamentaryElections
    பெசன்ட் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் 75 பட்டுப்புடவைகள், 95 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால் புடவைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆவணங்கள் கொண்டு வந்து மீண்டும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். #LSPolls

    நெல்லை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை ரொக்க பணம் ரூ.99 லட்சமும், பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1 கோடி வரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும் பறக்கும் படை அதிகாரிகள் காலையிலேயே தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். பழைய பேட்டை செக் போஸ்ட் பகுதிகளிலும், கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தில் இன்று அதிகாலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கணேசனிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துடன் வந்த காரில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இன்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அ.ம.மு.க. வேட்பாளர் ஞான அருள்மணி ஆகியோர் நெல்லை வந்தனர். அவர்களுடன் ஏராளமான கார்கள் வந்ததால், பாளை கே.டி.சி. நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள், வேன்கள் போன்றவற்றிலும் அதிரடி சோதனை நடந்தது.

    வேட்பாளர்களுடன் வந்த கார்களை, தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினர் வீடியோ எடுத்தனர். மேலும் தேர்தல் பிரசாரம் குறித்த பல்வேறு அம்சங்களையும் இன்று கண்காணிப்பு அதிகாரிகளின் குழுவினர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவங்கள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.  #Parliamentelection #LSPolls
    விழுப்புரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள அய்னாபாளைம் என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி இளநிலை என்ஜினீயர் குகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு பார்சல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாஷிங்மி‌ஷன், கிரைண்டர், மிக்க்ஷி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஏராளமாக இருந்தன.

    இது குறித்து லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த பொருட்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து டெலிவரிக்காக எடுத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த பொருட்களை தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வழங்குவதற்காக எடுத்து செல்கிறோம். அவர்கள் ஆன்லைனில் புக் செய்துள்ளனர் என்றனர்.

    ஆனால், அதற்கான ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து பல லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விழுப்புரம் ஆர்.டி.ஓ. குமரவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இந்த பொருட்கள் ஆன்லைனில் புக் செய்யப்பட்டு டெலிவரிக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சிறுபாக்கம் அருகே பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.5 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விருத்தாசலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் சிறுபாக்கம் பகுதியில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த முருகேசன்(50), செந்தில் குமார்(50) என்பது தெரிந்தது.

    முருகேசன் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 350 இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் கேட்டபோது, மரவள்ளி கிழங்கு வெட்டிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று கூறினர்.

    இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து நெய்வேலியை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரையும் சிறுபாக்கம் அருகே பறக்கும் படையினர் வழிமறித்தனர். அந்த காரில் விழுப்புரம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா செயலாளர் மகேந்திரன்(33), ரம்யா(35) ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் ரம்யா வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை எடுத்து செல்ல அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனைத்தொடர்ந்து இந்த பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    பறக்கும் படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனசோதனை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×