search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Improvement"

    • தேவிபட்டினம் நவபாஷாண கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அமர ஓய்வறை கூட இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் உள்ள நவபாஷாண கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வழிபடுவதன் மூலம் தடைபட்ட திருமணங்கள், தோஷங்கள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜை செய்வது வழக்கம்.ஆனால் பக்தர்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய கோவில் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    கடலிற்குள் அமைந்து உள்ள இந்த நவக்கிரக கோவிலுக்குச் செல்லும் நடைபாதையில் பதிக்கப் பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியு மாக உள்ளது. நவக்கிரக சன்னதிக்கு கடலில் உள்ள தண்ணீரில் இறங்கி சுவாமி கும்பிட வேண்டி உள்ளதால் அங்கிருக்கும் படிகள் பாசி படிந்து காணப்படுகிறது.

    பாதுகாப்பிற்காக அறநிலையத்துறை சார்பில் எந்த பாதுகாப்பு ஏற்பாடு களோ, பாதுகாவலர்களோ இல்லாத நிலை உள்ளது. தண்ணீரின் அளவு சில நேரங்களில் அதிகமாக உள்ளதால் பெண்கள் உள்ளிட்டோர் இறங்கு வதற்கு தயங்குகின்றனர். பக்தர்கள் நவபாஷாண சிலை வழிபாட்டிற்கு செல்வதற்கு காலணிகளை நடைமே டை முன்பக்கத்திலேயே கழற்றி விட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அங்கு காலணிகளை பாதுகாக்குமிடம் கூட இல்லை. கழிப்பறைகள் மிக மோசமாக உள்ளது. வேறு வழியின்றி அதையே பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் அமர ஓய்வறை கூட இல்லை. கடற்கரை ஓரமாக அம்மா பூங்கா ஒன்று இருக்கிறது. அதுவும் பூட்டப்பட்டு குப்பை நிறைந்து காணப்படுகிறது. அந்த பூங்காவை திறந்து பக்தர்கள் ஓய்வெடுக்க அனுமதித்தால் கூட பக்தர்களுக்கு சிரமம் நீங்கும். நவக்கிரக கோயிலுக்கு எதிர்புறத்தில் உள்ளசக்கர தீர்த்தம் மிகவும் பாசி படிந்து தெப்பத்திற்குள்ளேயே பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.

    கடற்கரைக்குள் குப்பை மரத்துாசிகள் நிறைந்துள்ளது. கடலில் சேருகின்ற குப்பைகளை அகற்றா விட்டால் மீன் போன்ற உயிரினங்கள் குப்பைகளை சாப்பிட்டு இறந்து போகும் நிலை உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் குப்பைகளும், குடிநீர் பாட்டில்களும் ஆங்காங்கே போடப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அறநிலையத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் உரியநடவடிக்கை எடுத்து கடற்கரையை பாதுகா ப்பதுடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.
    • ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீப நாட்களாக ஏற்காடு, சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக திகழ்ந்து வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் அடிப்படைத் தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகளை மேம்படுத்திடவும், குறிப்பாக குப்பைகளை முறையாகக் கையாளவும், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, ஏற்காட்டில் குப்பைகளை முறையாக கையாளுதல் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தால் செயல்பட்டுவரும் பயோ மீத்தேன் கேஸ், பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்தின் மூலம் ஏற்காட்டில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மீத உணவுகள், ஏற்காட்டில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை மறுசுழற்சி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் வீசி எறியாத வகையில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து அவற்றை அவ்வப்போது சேகரித்திடவும், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் ஊராட்சி ஒன்றிய தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, குப்பைகளைச் சேகரித்திடவும், இதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஏற்காட்டில் அமைந்துள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், அலங்காரா ஏரியை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் என ஏற்காட்டை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இதுதவிர, ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இந்த ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் 17 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50 பணிகளும், 15-வது மத்திய நிதிக்குழு (கிராம ஊராட்சி) சார்பில் 50 பணிகளும், பழங்குடியினர் மேம்பாட்டிற்கென அவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக 4 பணிகள் என மொத்தம் 158 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது உதவிப் பொறியாளர்கள் பூபதி, சதீஷ், பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.
    • விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக கொடுத்தனர்.

    கோவில்பட்டி

    தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சிவலார் பட்டி மற்றும் வெம்பூரில் கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் மண் மாதிரி மற்றும் பாசன நீர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கல்பனா தேவி தலைமை தாங்கினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி செயல் விளக்கத்தை பற்றி கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனையின் மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.

    கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துக் கொடுத்தனர். முகாமில் புதூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×