search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
    X

    அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நினைவு பரிசு வலுங்கல்.

    உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்

    • பணி பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவ–மனையில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ நாகைமாலியுடன் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான்சிம்சன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின் ராசரத்தினம், ஏ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

    அப்போது, கடந்த ஆட்சியின் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 11 ஆண்டுகளாக பழிவாங்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முதுநிலை பட்டியலின்படியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமலும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டும் கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடன் உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழியாக நிரப்பிட உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணிவிதி வெளியிட வேண்டும்.

    இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×