search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை"

    • கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டது.
    • அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சீரமைப்பு செய்து திறப்புவி ழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.என்.பிருந்தா தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் தலைவர் பி.சண்முகசுந்தரம் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் கே.பாலசுப்பிரமணியம் திறப்பு விழா செய்யப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்.
    • ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, அரசு வக்கீல் விஜயகுமார், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
    • எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது. பின்னர் அந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    உடனே சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் முத்துசாமி வந்து பார்வையிட்டார். அங்கு மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து கொண்டிருந்தனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார். இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பின்னர் எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். நடந்த இந்த சம்பத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி பெற்றோர்கள் எழுதி கொடுத்தனர். இதனால் மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து பள்ளி வகுப்பறையில் மேசை, நாற்காலி போன்ற பொருட்களை உடைக்கும் சம்பவத்தை ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வரைலாக பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி கூறுகையில் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து நொறுக்கி யுள்ளனர்.

    இதனால் அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களை எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்மந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். 

    • வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
    • ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.

    • வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாடு, திட்டத்தின் கீழ் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம் வரவேற்று பேசினார்.

    விழவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

    நிகழ்சியில் பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகன்யா ஆகிய கலந்து கொண்டனர்.

    முடிவில் வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தவமணி நன்றி கூறினார்.

    • மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.
    • அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன

    நாகர்கோவில் :

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப் பள்ளி, ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.

    இதன் அடிப்படையில் இப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தர நிதி ஒதுக்கீடு செய்திட அரசிடம் பரிந்து ரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊராட்சிப் பள்ளிகளில் புதிய வகுறை கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.1 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது.

    ஆரல்வாய் மொழி தாணுமாலை யன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம், ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன. பணிகள் விரை வில் தொடங்கப்பட உள் ளது. இதற்காக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம்.
    • ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தாமரை செல்வன், ஒன்றிய குழு துணை தலைவர் தியாக பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் ஊராட்சி பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் ரூ.24.15 லட்சம் மதிப்பீட்டிலும், தியாகசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புள்ளபூதங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டிலும், உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    • சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர –வேண்டும்.
    • ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம–டைந்திருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    தரங்கம்பாடி, டிச.18-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை–களை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    மோகன்தாஸ்:- மக்கள் கூடும் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாந்தி:- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும்.

    சக்கரபாணி:- மருதூர் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்து வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டிடம் தரவேண்டும்.

    ராஜ்கண்ணன்:- மடப்புரம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    முத்துலட்சுமி:-ஆறுபாதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் பகுதிநேரஅங்காடி அமைத்து தர வேண்டும். ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நிலத்தடிநீர் பாதிக்கும் வகையில் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரஜினி:-சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் மயான சாலை அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    தற்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் வெண்ணிலா தென்னரசு, துளசிரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய பொறியாளர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.

    • அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள பகுதியாகும். இங்கு விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் குழந்தைகளின் நலன்கருதி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அபிராமம் பகுதியில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அரசுப்பள்ளியை நம்பியே மாணவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் ஏழை, எளிய விவசாயிகளின் பிள்ளைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

    அதேபோல் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவ- மாணவிகளும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.

    மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    • ரூ. 34.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்.
    • ரூ. 19 லட்சம் மதிப்பில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 9 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ. 17.26 லட்சம் மதிப்பீட்டில் குரு வட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலக கட்டிடமும், பூதலூர் வட்டம் அகரப்பேட்டை ஊராட்சி, திருவையாறு வட்டம் மன்னார் சமுத்திரம் ஊராட்சி மற்றும் மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியிலும் தலா ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இதேப்போல் திருவையாறு வட்டம் கண்டியூர் ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடமும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இலுப்பைக்கோரை ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், திருப்பனந்தாள் வட்டம் அணைக்கரை ஒன்றியத்தில் ரூ. 19.00 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், திருவிடைமருதூர் வட்டம் முருக்கங்குடி ஊராட்சியில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர்தமிழ்ச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை நாகவேலு, வேளாண்மை துறை இணை இயக்குனர்ஈஸ்வர் (பொ), நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்தேவராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்முத்து, ஒன்றிய குழுத் தலைவர்கள்அரங்கநாதன் (பூதலூர்), அரசாபகரன் (திருவையாறு), சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை பிஷி ஜாஸ்மின் தலைமையில் நடைபெற்றது. புதிய வகுப்பறைகளை பிரின்ஸ் எம். எல். ஏ., நகர்மன்ற தலைவர் நசீர், வட்டார கல்வி அலுவலர் ஹரிகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங். தலைவர் கே. டி. உதயம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்சேகர், லாரன்ஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ், நகர தலைவர் சந்திரசேகர், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், கவுன்சிலர்கள் ரமேஷ் செல்வகுமாரி, சுரேஷ் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பசீலா, துணைத்தலைவர் சமீனுதீன், பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    ×