search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 வீரர்கள் பலி"

    அமெரிக்காவில் தந்தையை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USIndianSentence #IndianKillingFather
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் சைலேவில்லெ நகரில் வசித்து வருபவர் விஷால் ஷா(வயது 22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், இவரது தந்தை பிரதீப்குமார் ஷாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷால் ஷா கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷால் ஷாவை கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நியூ பிரன்ஸ்விக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தந்தையை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக விஷால் ஷாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் விஷாலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், 85 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்தபிறகே பரோல் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #USIndianSentence #IndianKillingFather
    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த உ.பி.யைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #compensationformartyrs #YogiAdityanath
    லக்னோ:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath
    ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு 25 வினாடிகள் முன்னதாகவே பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றதால் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. #JapanRail
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். 

    இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும்.



    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. 

    இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள்ளிகள், அலுவலகங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு சிலர் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியுள்ளது. #JapanRail
    திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து மூதாட்டியை அடித்துக் கொன்றது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநில நபர்கள் புகுந்து குழந்தைகளை கடத்திச் செல்வதாக வலை தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வரும் அடையாளம் தெரியாதவர்களையும் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் ‘திருடன்’ என வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கிராம மக்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறிலும் திருமண விசே‌ஷத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் சதாசிவம். திருடன் என நினைத்து கல்வீசி கொல்லப்பட்டார். இந்த நிலையில் போளூரில் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

    சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி (வயது 65). இவரது அக்காள் மகன் மோகன்குமார் (34). மற்றும் உறவினர் சந்திரசேகரன் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.

    தற்போது சென்னை வந்துள்ள அவர்கள் இருவரும் நண்பர்கள் வெங்கடேசன் (51), கஜேந்திரன் ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல நேற்று காலை காரில் புறப்பட்டனர்.

    ருக்மணிக்கு குலதெய்வ கோவில் தெரியும் என்பதால் அவரும் அவர்களுடன் சென்றார்.

    போளூர் அடுத்த ஜம்னாமரத்தூர் அருகே உள்ள தம்புகொட்டான் பாறை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழி தெரியாததால் அங்கு காரை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா மகள்கள் ஜனசுருதி (4), ருத்ராஸ்ரீ(3) மற்றும் சில குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    குழந்தைகளை பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய ருக்மணி அவர்களுக்கு வெளிநாட்டு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.

    இதை பார்த்த அங்கிருந்த பெண்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என கூச்சல் போட்டதோடு மூதாட்டி ருக்மணியை தாக்கினர். அங்கிருந்த பெண் ஒருவரும் தாக்கினர். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

    இதை சற்றும் எதிர்பாராத மூதாட்டி மற்றும் காரில் வந்தவர்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து காரில் ஏறி தப்பி சென்றனர்.

    உடனே பக்கத்தில் உள்ள களியம் கிராமத்திற்கு கார் எண்ணை கூறி குழந்தை கடத்தல் கும்பல் வருகிறார்கள் என்று தம்புகொட்டான்பாறை கிராமத்தினர் செல்போனில் தகவல் அளித்தனர்.

    இந்த தகவல் ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் வேகமாக பரவியது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் களியம் பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    சிறிது நேரத்தில் களியம் பஸ் நிலையம் அருகே அந்த கார் வந்தது. காரை கிராம மக்கள் வழிமறித்தனர்.

    பின்னர் காரில் இருந்த 5 பேரையும் கீழே இழுத்து போட்டு உருட்டு கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கினர்.

    அடி உதை தாங்காமல் அலறிய அவர்கள் நாங்கள் சென்னையில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு வந்தோம். வழிபாடுக்கு கோவிலுக்கு வந்தோம். நாங்க... குழந்தையை கடத்த வரவில்லை. என்று கதறினர்.

    ஆனாலும் அவர்கள் சொல்வதை கேட்காமல் கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் 5 பேருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய நிலையில் எங்களை விட்டு விடுங்கள் என்று அவர்கள் மன்றாடியபோதும் கோர தாக்குதலை கிராம மக்கள் நிறுத்தவில்லை.

    ஒரு கட்டத்தில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    ருக்மணியின் கணவர் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். காயமடைந்த சென்னை பழைய பல்லாவரம் வெங்கடேசன். மலேசியாவை சேர்ந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தையடுத்து போளூர் டி.எஸ்.பி. சின்ராக் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கிராமத்திற்கு சென்று விரட்டி விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    தம்புகொட்டான்பாறை கலியம், திண்டிவனம், இந்திரா நகர் கணேசபுரம், அத்திமூர் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த 62 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் சிவா, முருகன், ரஞ்சித், அத்திமூர் ஷேக், அசோக், பாலா, சந்திரசேகர் பிரசாந், ஏழுமலை, பிரபு, சிவக்குமார், ஜம்பிங்புரம் சிவக்குமார், பழனி, ராஜாபாபு, பிரபாகரன், மணிகண்டன், ராஜமூர்த்தி, மாயகண்ணன், முருகன், சக்திவேல், ராமச்சந்திரன், கோவிந்தராஜ், ஜெயபிரகாஷ், மேலும் 2 பேர் உள்பட 25 பேரை கைது செய்தனர்.

    மேலும் 37 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்களை போளூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். அங்கிருந்தவர்கள், அவர் குழந்தைகளை கடத்த வந்திருப்பவர் என கருதி அவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சஞ்சய் (28) என்றும், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    சோளிங்கரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் அங்கு வந்தவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளாய், உனக்கு எந்த ஊர் என கேட்டுள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் பதில் கூற முடியவில்லை.

    இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என கூறி அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார்.

    இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கரை சேர்ந்த விஜய் (வயது 25), முத்து (23), பாபு (26), கணேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர்.




    ×