search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 வீரர்கள் பலி"

    நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    லாகோஸ்:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 
     
    இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.

    இந்த தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
    கோவையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 25 பேரை கைது செய்த போலீசார் 262 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே கோவை புறநகர் பகுதிகளான பேரூர், தொண்டாமுதூர், சிறுமுகை, சூலூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 74 மது பானங்கள், ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட் டது. இதேபோல் கோவை மாநகர பகுதியான காட்டூர், சாய்பாபா காலணி, ராமநாத புரம், போதனூர், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவ ணம்பட்டி பகுதிகளில் மது விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.

    அதனை தொடர்ந்து மது விற்பனை செய்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர்களிடம் இருந்து 188 மது பாட்டில்கள் பறிமு தல் செய்யப்பட்டது. சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக ளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவ தும் மது விற்றதாக 25 பேர் கைது செய்யப்பட்டு, மொத் தம் 262 மது பாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. #CycloneFani #AdaniGroup
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.



    அதானி குழுமம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல்வேறு சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #CycloneFani #AdaniGroup
    நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். #PMModi #Chowkidar
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி (சவுகிதார்) என்று அழைத்து வருகிறார். ஆனால், ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை விமர்சித்து வருகிறார்.

    எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடையே (வாட்ச்மேன்) இன்று உரையாற்றுகிறார். ஆடியோ வசதியில் அவர் பேசுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ‘நானும் காவலாளிதான்’ பிரசாரத்தில் இணைந்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, 31-ந் தேதி நடக்கிறது. 500 இடங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவல்களை பா.ஜனதா ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி தெரிவித்தார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

    அருணாசலபிரதேசம் இடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:-

    ரபேல் விவகாரத்தில், இந்த நாட்டின் காவலாளி அம்பலப்படுத்தப்பட்டார். நாட்டின் காவலாளியே, திருடனாக மாறும்போது நாடு எப்படி முன்னேறும்?

    நீங்களே எல்லாவற்றையும் திருடும்போது, ஏன் உங்கள் கட்சி தலைவர்களையும் ‘காவலாளி’ ஆக்கினீர்கள்?

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
    ஆந்திராவில் 25 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி விவசாயி குடும்பத்துடன் பிச்சை எடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. #AndhraFarmer
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி வருவாய்த்துறையில் புகார் செய்தார். நிலத்தை மீட்டு கொடுக்க அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் ராஜு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சாலையில் நடந்து செல்பவர்களிடமும், கடை கடையாக ஏறியும் பிச்சை கேட்டார்.

    தங்களது கழுத்தில் “அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. எனவே எங்களுக்கு பிச்சை போடுங்கள்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாட்டியபடி பிச்சை எடுத்தனர்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, “எனது 25 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் பறித்து விட்டனர். அதை மீட்க 2 ஆண்டுகளாக போராடி வருகிறேன். லஞ்சப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரி கூறுகிறார். பணம் இல்லாத எனக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

    தயவு செய்து எனக்கு பிச்சை போடுங்கள். அப்போதுதான் நான் லஞ்சப் பணத்தை கொடுக்க முடியும். லஞ்சம் கொடுத்தால் எந்த பணியும் நடக்கும். நான் லஞ்சம் கொடுக்காததால் எனது நிலத்தை இழந்து விட்டேன்.

    இதனால் பிச்சை எடுத்து லஞ்சப்பணத்தை கொடுக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் கூறும் போது, “ராஜுவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதனால் அவர் மீது வருவாய்த்துறை மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அவரது நிலத்தை உறவினர்கள் அபகரித்து இருந்தால் அவர் கோர்ட்டை அணுகி இருக்க வேண்டும்” என்றார்.   #AndhraFarmer
    கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் இன்று கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #25Passengersdied #Mandyabus #PMModi
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
     
    இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கிய சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.



    இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #25Passengersdied #Mandyabus #PMModi
    பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர். #PakistanBlast
    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் இன்று காலை வழக்கம்போல் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க திரண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்தன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் ஏதேனும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது.



    முன்னதாக சீன தூதரகத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களை அடுத்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு மாகாண முதல்வர் மெஹ்மூத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மாகாணம் அமைதியாக இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanBlast
    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை பயன்படுத்திய நர்சால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் ஒரே ஊசியை நர்சு பயன்படுத்தினார்.

    ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் ஆகும். ஆனால் அதை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியையே போட்டுள்ளனர்.



    மேலும் ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தி உள்ளார்.

    இதனால் அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    முகநூல் மூலம் காதலித்து பட்டதாரி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகைகளை மோசடி செய்த நடனக்கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னை போரூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். அங்கிருந்தவாறே அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வடபழனி சாலிகிராமம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் (வயது 25) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஸ்வர் நடனக்கலைஞர் ஆவார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்ணிடம் அவர் நெருங்கிப்பழகினார். மேலும் திருமணம் செய்வதாகவும் கூறி அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகையையும் பெற்று உள்ளார். இதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த இளம்பெண் விக்னேஸ்வரிடம் கூறினார். ஆனால் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி விக்னேஸ்வர் காலம் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் விக்னேஸ்வர் தன்னை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட அந்த இளம்பெண், அவரிடம் முறையிட்டார்.

    அப்போது, ‘உன்னை நான் திருமணம் செய்வும் மாட்டேன், வாங்கிய பணம் மற்றும் நகையையும் திருப்பி தரமுடியாது’ என விக்னேஸ்வர் கூறினார். மேலும் பணம் மற்றும் நகையை கேட்டாலோ, வெளியில் கூறினாலோ, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாரையும் இதைப்போல் அவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளரா? எனவும் விசாரித்து வரும் போலீசார், விக்னேஸ்வரின் முகநூல் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டதாரி பெண்ணை முகநூல் மூலம் காதலித்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நடனக்கலைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அம்பத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Facebook #JewelTheft 
    கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெலங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தபடி 25 கோடிக்கான காசோலையை இன்று கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினேன். மேலும், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 50 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விரைவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார். #25hours #futureEarth
    நியூயார்க்:

    அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,

    140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது  தற்போது 24 மணி நேரமாக உள்ளது.

    நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது  இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    "ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!"  என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர்  ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

    கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். #25hours #futureEarth
    சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள ஓட்டலில் தவறவிட்ட ரூ.25 லட்சத்தை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
    வில்லிவாக்கம்:

    அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு சென்றனர்.

    இரவு 10.30 மணியளவில் ஊழியர் ரவி மேஜைகளை கண்காணித்த போது மேஜையில் ஒரு பை கேட்பாரற்று இருந்ததை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்த போது அதற்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக அந்த பையை மானேஜர் பாலுவிடம் ஒப்படைத்தார். இருவரும் ஓட்டல் நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் இன்று காலையில் அந்த பணப்பையை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்ததும் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். அவருக்கு கைகடிகாரம் ஒன்றை பரிசளித்தார். ரவியின் சொந்த ஊர் செஞ்சி.

    பணத்துக்கு உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை. உரிமை கோரி வருபவர்களிடம் விசாரணை நடத்தி உரியவரிடம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×