search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 crore cheque"

    கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெலங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தபடி 25 கோடிக்கான காசோலையை இன்று கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினேன். மேலும், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 50 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விரைவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    ×