search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 arrested"

    கோவையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 25 பேரை கைது செய்த போலீசார் 262 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே கோவை புறநகர் பகுதிகளான பேரூர், தொண்டாமுதூர், சிறுமுகை, சூலூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 74 மது பானங்கள், ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட் டது. இதேபோல் கோவை மாநகர பகுதியான காட்டூர், சாய்பாபா காலணி, ராமநாத புரம், போதனூர், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவ ணம்பட்டி பகுதிகளில் மது விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.

    அதனை தொடர்ந்து மது விற்பனை செய்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர்களிடம் இருந்து 188 மது பாட்டில்கள் பறிமு தல் செய்யப்பட்டது. சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக ளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவ தும் மது விற்றதாக 25 பேர் கைது செய்யப்பட்டு, மொத் தம் 262 மது பாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து மூதாட்டியை அடித்துக் கொன்றது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநில நபர்கள் புகுந்து குழந்தைகளை கடத்திச் செல்வதாக வலை தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வரும் அடையாளம் தெரியாதவர்களையும் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் ‘திருடன்’ என வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கிராம மக்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறிலும் திருமண விசே‌ஷத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் சதாசிவம். திருடன் என நினைத்து கல்வீசி கொல்லப்பட்டார். இந்த நிலையில் போளூரில் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

    சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி (வயது 65). இவரது அக்காள் மகன் மோகன்குமார் (34). மற்றும் உறவினர் சந்திரசேகரன் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.

    தற்போது சென்னை வந்துள்ள அவர்கள் இருவரும் நண்பர்கள் வெங்கடேசன் (51), கஜேந்திரன் ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல நேற்று காலை காரில் புறப்பட்டனர்.

    ருக்மணிக்கு குலதெய்வ கோவில் தெரியும் என்பதால் அவரும் அவர்களுடன் சென்றார்.

    போளூர் அடுத்த ஜம்னாமரத்தூர் அருகே உள்ள தம்புகொட்டான் பாறை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழி தெரியாததால் அங்கு காரை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா மகள்கள் ஜனசுருதி (4), ருத்ராஸ்ரீ(3) மற்றும் சில குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    குழந்தைகளை பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய ருக்மணி அவர்களுக்கு வெளிநாட்டு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.

    இதை பார்த்த அங்கிருந்த பெண்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என கூச்சல் போட்டதோடு மூதாட்டி ருக்மணியை தாக்கினர். அங்கிருந்த பெண் ஒருவரும் தாக்கினர். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

    இதை சற்றும் எதிர்பாராத மூதாட்டி மற்றும் காரில் வந்தவர்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து காரில் ஏறி தப்பி சென்றனர்.

    உடனே பக்கத்தில் உள்ள களியம் கிராமத்திற்கு கார் எண்ணை கூறி குழந்தை கடத்தல் கும்பல் வருகிறார்கள் என்று தம்புகொட்டான்பாறை கிராமத்தினர் செல்போனில் தகவல் அளித்தனர்.

    இந்த தகவல் ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் வேகமாக பரவியது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் களியம் பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    சிறிது நேரத்தில் களியம் பஸ் நிலையம் அருகே அந்த கார் வந்தது. காரை கிராம மக்கள் வழிமறித்தனர்.

    பின்னர் காரில் இருந்த 5 பேரையும் கீழே இழுத்து போட்டு உருட்டு கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கினர்.

    அடி உதை தாங்காமல் அலறிய அவர்கள் நாங்கள் சென்னையில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு வந்தோம். வழிபாடுக்கு கோவிலுக்கு வந்தோம். நாங்க... குழந்தையை கடத்த வரவில்லை. என்று கதறினர்.

    ஆனாலும் அவர்கள் சொல்வதை கேட்காமல் கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் 5 பேருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய நிலையில் எங்களை விட்டு விடுங்கள் என்று அவர்கள் மன்றாடியபோதும் கோர தாக்குதலை கிராம மக்கள் நிறுத்தவில்லை.

    ஒரு கட்டத்தில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    ருக்மணியின் கணவர் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். காயமடைந்த சென்னை பழைய பல்லாவரம் வெங்கடேசன். மலேசியாவை சேர்ந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தையடுத்து போளூர் டி.எஸ்.பி. சின்ராக் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கிராமத்திற்கு சென்று விரட்டி விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    தம்புகொட்டான்பாறை கலியம், திண்டிவனம், இந்திரா நகர் கணேசபுரம், அத்திமூர் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த 62 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் சிவா, முருகன், ரஞ்சித், அத்திமூர் ஷேக், அசோக், பாலா, சந்திரசேகர் பிரசாந், ஏழுமலை, பிரபு, சிவக்குமார், ஜம்பிங்புரம் சிவக்குமார், பழனி, ராஜாபாபு, பிரபாகரன், மணிகண்டன், ராஜமூர்த்தி, மாயகண்ணன், முருகன், சக்திவேல், ராமச்சந்திரன், கோவிந்தராஜ், ஜெயபிரகாஷ், மேலும் 2 பேர் உள்பட 25 பேரை கைது செய்தனர்.

    மேலும் 37 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்களை போளூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். அங்கிருந்தவர்கள், அவர் குழந்தைகளை கடத்த வந்திருப்பவர் என கருதி அவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சஞ்சய் (28) என்றும், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    சோளிங்கரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் அங்கு வந்தவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளாய், உனக்கு எந்த ஊர் என கேட்டுள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் பதில் கூற முடியவில்லை.

    இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என கூறி அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார்.

    இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கரை சேர்ந்த விஜய் (வயது 25), முத்து (23), பாபு (26), கணேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர்.




    ×