என் மலர்
நீங்கள் தேடியது "25 lakh"
- டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது.
- இந்த எண்ணுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.
ஐதராபாத்:
எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.
இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தெலுங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஎஸ்-09-9999 என்ற பேன்சி நம்பரை வாங்கினார்.
பேன்சி பதிவு எண்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை தெலுங்கானா சாலை போக்குவரத்து ஆணையம் நடத்தியது. அப்போது டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது. மொத்தம் 11 பேர் இதில் போட்டியிட்டனர்.
இறுதியாக, கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இந்த எண்ணை 25,50,002 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
தெலுங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பேன்சி நம்பர் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath






