search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்யநாத்"

    • யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார்.

    மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலைக்கு சென்றார்.

    அந்த பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து ரஜினியோ, "வயதில் சிறியவராக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்" என்றார். இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, தனது பேஸ்புக் பதிவில் ரஜினியை கிண்டலடித்து பதிவை வெளியிட்டுள்ளார். "ஹூகும் ஜெயிலர்" என்ற ஹேஸ்டேக்குடன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடலை நீட்டுவதும், வளைப்பதும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் நம் சூப்பர் ஸ்டார் யோகி போன்ற ஒருவரின் முன் வளைந்த விதம், அவரது முதுகை எளிதில் உடைக்கக்கூடும். அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    ரஜினி குறித்து கேரள மந்திரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
    • ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

    பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார். 

    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் இதுவரை ரூ. 350 கோடிக்கும் அதிக வசூலை பெற்றுள்ளது.
    • ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் புதிய திரைப்படம் ஜெயிலர். வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ஜெயிலர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இமய மலை பயணம் சென்றுவிட்டார்.

     

    இமய மலை பயணத்தை தொடர்ந்து உத்திர பிரேதச மாநிலத்தில் இருக்கும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நாளை ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீசில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், இவை அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம் என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷராஃப், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    • முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.
    • குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநில வளர்ச்சி பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை. அரசு சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்தவர்களுக்கு நான் ஆரத்தியா எடுக்க முடியும்? குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்படுகிறது என்றார்.

    • எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. என பெயர் வைத்துள்ள நிலையில் பா.ஜக-வினர் விமர்சனம்
    • உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    இந்தியா எனப் பெயர் வைத்துள்ளதற்கு விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரே இந்தியா என பெயர் வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    நேற்று பிரதமர் மோடி கிழக்கு இந்திய கம்பெனிகள், இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்டவைகளிலும் இந்தியா உள்ளது. நாட்டின் பெயரை வைத்து மக்களை திசைதிருப்பி ஏமாற்றிவிட முடியாது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கிண்டல் செய்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைத்துள்ள இந்தியா பெயர் குறித்து கூறுகையில் ''காகம் தனக்குத்தானே அன்னம் என பெயர் வைத்துக் கொண்டாலும், அதனால் முத்தை எடுக்க முடியாது. அமாவாசை பவுர்ணமி என பெயர் மாற்றப்பட்டாலும், அது முழுமையான வெளிச்சத்தை கொடுக்க முடியாது. அதேபோல்தான், பெயரை மாற்றினாலும், பிளவுபடுத்தும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பார்வை முடிவுக்கு வராது.'' என்றார்

    மேலும், உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவும் அரசியல் பிரமுகருமான அதிக் அகமதுவிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 76 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த குடியிருப்புகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திறந்து வைத்தார்.

    மேலும் இந்த குடியிருப்புகளை மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கினார். ஜூன் 9ம் தேதி நடைபெற்ற குலுக்கல் முறைப்படி பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 41 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.3.5 லட்சத்திற்கு பயனாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    குடியிருப்பை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, அவர்களின் குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை மற்றும் அக்கொலைக்கு முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, கடந்த ஏப்ரல் 15ம் தேதி இரவு, பிரயாக்ராஜில் காவல்துறையினரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது.

    அயோத்தி :

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், '500 ஆண்டு காத்திருப்புக்குப்பின் ராம பிரானின் சொந்த கோவிலில் அவரது சிலையை நிறுவுவது முக்கிய மைல்கல்களில் ஒன்றாக இருக்கும். உலக அளவில் அயோத்தியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அயோத்தியின் பிரதான ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெரிய நகரமும் அயோத்தியுடன் இணைக்கப்படும். அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது. நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் முடிவடையும்போது, உலகிலேயே மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி அங்கீகரிக்கப்படும்' என்றும் கூறினார்.

    • ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது.
    • விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    லக்னோ:

    அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை.

    விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    பிரமாண்டமான கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.

    இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இந்த திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.


    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படத்திற்கு வரி விலக்கு அறிவிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



    மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார். 

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது
    • வேலையில்லா இளைஞர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என ராகுல் எச்சரிக்கை

    லக்னோ:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். வேலையில்லா இளைஞர்களை அக்னிப் பாதையில் நடக்கவிட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பொன்னான அடித்தளத்தையும் கொடுக்கும் என அவர் கூறி உள்ளார்.

    மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ராணுவ வீரர்களுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறை மற்றும் இதர பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். 

    மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

    அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 

    அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம்.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    ×