search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்யநாத்"

    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
    • காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வட இந்திய தலைவர்களும் வருகிறார்கள்.

    மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், பிரபலங்கள் என 50 பேர் வருகிறார்கள். இவர்கள் 39 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.

    மேலும் காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.

    • இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
    • அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

    கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

    அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.

    அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.

    ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

    வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.

    ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.

    அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    • இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது.
    • உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தார்.

    இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்தும், மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் இருந்தும் விழாவில் இணைந்தனர்.

    அப்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, வருகிற 22-ந்தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் அங்கு 19 விமான நிலையங்களாக உயரும்" என்றார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
    • அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ம் தேதி அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். 22-ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    • புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.
    • ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன்.

    ஐதராபாத்:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அயோத்தி மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ராமர் பக்தர் ஒருவர், அயோத்தி ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை சுமந்தபடி அயோத்திக்கு நடந்தே செல்கிறார்.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஐதராபாத்தை சேர்ந்தவர் சல்லா சீனிவாச சாஸ்திரி (வயது 64). தீவிர ராமர் பக்தரான இவர், அயோத்தியில் உள்ள சாமி ராமருக்காக ரூ.65 லட்சம் மதிப்பில், ஐம்பொன்னால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை கொண்டு செல்ல முடிவு செய்தார்.

    மேலும் அதனை தனது தலையில் சுமந்தபடி, ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு சுமார் 8 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புனித நடை பயணமாக செல்ல திட்டமிட்டார்.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார்.

    அவர் தனது பயணத்தின் இடையே லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் சீனிவாச சாஸ்திரி, தனது பயணத்தை சில நாட்கள் ஒத்தி வைத்து இருந்தார்.

    பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூடம் என்னும் இடத்தில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்த இடத்தில் இருந்து அயோத்தி நகரம் சுமார் 272 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இன்னும் 10 நாட்களில் அவர் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பதால் தினமும் 30 கி.மீ. நடக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுபற்றி சீனிவாச சாஸ்திரி கூறுகையில், 'ஆஞ்சநேயரின் தீவிர பக்தரான எனது தந்தை, அயோத்தியில் நடந்த கர சேவையில் கலந்துகொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். இப்போது எனது தந்தை இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், பகவான் ராமருக்காக தங்க முலாம் பூசப்பட்ட காலணிகளை தலையில் சுமந்தபடி புனிதப்பயணமாக வந்துள்ளேன்.

    இன்னும் சில தினங்களில் அயோத்தியை சென்று அடைவேன். அங்கு இந்த புனித காலணிகளை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன்.

    ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்கனவே 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளேன். தற்போது சிலரின் நன்கொடை உதவியுடன் இந்த புனித காலணிகளை செய்துள்ளேன். எனது மகன் சல்லா பவன் குமார். சவுண்ட் என்ஜினீயரான அவர் பல திரைப்பட ஸ்டூடியோக்களில் பணிபுரிந்துள்ளார் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
    • சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி:

    பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ந்தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். அங்கு நடக்கும் தேர் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றில் இந்த சிலை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியாநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டன. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும்.

    இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர். இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வடித்த சிலைதான் அயோத்தி ராமர் கோவிலில் இடம்பெறப் போவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அயோத்தி முழுக்க ஆங்காங்கே அன்னதானம் நடந்து வருகிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் (17-ந்தேதி) அந்த ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கோவிலில் மூலவர் சிலையாக பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரத்தையும் அறிவித்துள்ளார். கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் அட்ஷதை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சம்பத்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் கருவறையில் பால ராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ந்தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

    அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.

    • அயோத்தி கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர்.
    • ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இதற்கு கோவில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.

    இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோவிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை, உத்தர பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கோவில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.

    இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000 என்றிருந்த சம்பளம் ரூ.31,960 ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும் உயர்த்தி தரப்படும். ராமர் கோவிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உத்தரபிரதேச அரசுக்கு காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோவிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
    • குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு நடந்த 343 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:

    சட்டத்தை சீர்குலைக்க யாரும் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். பெண்களை துன்புறுத்துவது போன்ற பாலியல் குற்றத்தை யாராவது செய்தால் அவர்களுக்காக மரண தெய்வமான எமராஜ் காத்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம்.
    • இதன் மூலம் தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும்.

    பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

    இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் குறைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் முறையிடலாம். இதற்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்துள்ளார்.

    முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில், "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 கோடி பேரும் 'ஒரே குடும்பம்'. முதலமைச்சரின் தலைமையில், உத்தர பிரதேச அரசங்கம் 'குடும்பத்தின்' ஒவ்வொருத்தர் நலம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது."

    "உத்தர பிரதேச குடும்பத்தின் ஒவ்வொருத்தாருடன் எளிதில் தகவல் பரிமாற்றம் செய்யவும், தகவல் பரிமாற்றம்தான் ஜனநாயகத்தின் ஆத்மா என்று நினைக்கும் முதலமைச்சர் சார்பில் மாநில அரசு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுநலன் மற்றும் அரசு துறை திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும். இந்த சேனலில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

    • யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார்.

    மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலைக்கு சென்றார்.

    அந்த பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து ரஜினியோ, "வயதில் சிறியவராக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்" என்றார். இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, தனது பேஸ்புக் பதிவில் ரஜினியை கிண்டலடித்து பதிவை வெளியிட்டுள்ளார். "ஹூகும் ஜெயிலர்" என்ற ஹேஸ்டேக்குடன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடலை நீட்டுவதும், வளைப்பதும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் நம் சூப்பர் ஸ்டார் யோகி போன்ற ஒருவரின் முன் வளைந்த விதம், அவரது முதுகை எளிதில் உடைக்கக்கூடும். அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    ரஜினி குறித்து கேரள மந்திரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
    • ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

    பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார். 

    ×