search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோதம்"

    • வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.
    • முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் வலிய விளை காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 53).

    அதேபகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் மகன் அபீஸ்(20). நேற்று மதியம் முருகன் வீட்டில் இருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அபீஸ், முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.

    அதனை தட்டிக்கேட்ட முருகனை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட முருகன் தப்பி ஓடிவிட்டார்.

    அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அபீஸ், வீட்டில் கட்டப்பட்டிருந்த முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

    இது குறித்து முருகன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபீஸை கைது செய்தனர்.

    • 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 41). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காசிவேலின் மகன் இறந்தது தொடர்பாக 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலு, அவரது மனைவி இந்திரா, ஹரிணி மற்றும் அவரது உறவினர் பாலாஜி ஆகியோர் வெளியில் சென்று தனது வீட்டிற்கு சென்றனர். அப்போது எதிரில் வந்த காசிவேல், அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் சின்னமணி, மஞ்சுளா ஆகியோர் இவர்களை வழிமறித்தனர். அவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாலு மனைவி இந்திரா (32) கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் கைது
    • கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை,காரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவில் ராணிப்பேட்டை பஜாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தனது நண்பர்களிடம் பைனான்ஸ் வசூல் செய்வதற்காக வந்து வசூல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளா என்கிற இளம்பரிதி (32), ஆர்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த லொட்டா என்கிற சண்முக பிரியன் (26) ஆகிய இருவரும் ஏற்கனவே சினிமா தியேட்டரில் படம் பார்த்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜீவ் காந்தியை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

    கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.7ஆயிரத்து 500 மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ராஜீவ் காந்தி ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதி, சண்முக பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் விவகாரம்
    • 3 பேருக்கு வலைவீச்சு

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது தம்பி ஏழுமலை (வயது 55). இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி வீட்டுக்கு சென்ற ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகியோர் வீட்டுமனை விவகாரம் தொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

    அப்போது சுப்பிரமணிக்கு ஆதரவாக வந்த அவரது மருமகன் அருண்குமாரை (38) கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் சுப்பிரமணி, அவரது மகன் கருணாகரனையும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்காலூர் போலீசார் ஏழுமலை, ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
    • முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள மெலட்டூர் பகுதி, வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்ற இளங்கோ(வயது31).

    கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக, அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இளங்கோ நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே ெவட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

    இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ கொலை தொடர்பாக அம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஆனந்தபாபு(வயது30), பிரவீன்(24), திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியை சேர்ந்த மதன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இளங்கோ ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததாவும் இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளங்கோ கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    மேலும், இளங்கோ கொலை வழக்கில், தப்பிஓடிய சேர்மாநல்லூர் பகுதியை சேர்ந்த பாபு, தினேஷ், வடபாதி உடையார்கோவில் பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சங்கருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்( வயது 35). இவருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தியின் மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    அதேபோல் சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சங்கர் மற்றும் சத்யா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த6 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம்
    • தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அயனிவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ஐரிஸ் (வயது 42). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஐரிஸ் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த ராஜன் (43) என்பவருக்கும், ஐரிஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் இருக்கும்போது ராஜன் வீட்டின் முன்பக்கம் வந்து நின்று அவதூறாக பேசி கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கல்லால் தாக்கியதில் ஐரிசுக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஐரிஸ் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப்ப திவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    • கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக்அலி(வயது 42) பெயிண்டர். இவருக்கும் கோசாகு ளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பாஸ்கரை தேடி வந்த பெயிண்டர் சேக்அலிக்கும் பாஸ்கர் மகன் ஸ்ரீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீபன் மற்றும் அவரது தயார் செல்வி ஆகியோர் சேக் அலியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த சேக்அலி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபனை கைது செய்தனர்.

    அவரது தயார் செல்வியை தேடி வருகின்றனர்.

    • முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன்.

    இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனை யாவை கைது செய்தனர்.

    • முன்விரோதத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் வேலுமணி (25). இவரது நண்பர்கள் பாலமுருகன், தெய்வேந்திரன், மருதுபாண்டி. இவர்கள் அடிக்கடி மெக்கானிக் ஷாப்பில் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் மது அருந்துவது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த3 பேரும் மெக்கானிக் வேல் மணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து வேலுமணி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், தேவேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.

    மதுரை தெப்பக்குளம் கேட்டலாக் ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இருள்ராஜ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெகதீசனை வழிமறித்து இருள்ராஜ் பாட்டிலால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு இருள்ராஜை கைது செய்தனர்.

    • விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளை யார் கோவில் தெருவில் வசிப்பவர் வாசுகி (வயது30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டே தொழில் செய்து வருகிறார். இரு வர்கள் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மரபொருட்கள், விறகுகளை வைப்பதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், சம்பவத் தன்று இருவரும் தங்கள் பொருட்கள் போட்டு வைத்திருந்த இடத்தில் குப்பைகளை எரித்ததாக கூறப்படுகிறது. இதில் இரு வருகும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜசேகர், வாசுகியை மரக்கட்டையால் தாக்கி, வாசுகியின் ஸ்கூட்டரை தீயில் தள்ளி விட்டு எரித்ததாக கூறப்படு கிறது.

    • ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும் , வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி என தனி தனியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×