search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் தற்கொலை"

    • கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த புக்குளம் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 56) .கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணிக்கு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.

    பின்பு உறவினர்கள் இவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்

    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி(71). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அழகர்சாமி விஷம் குடித்து சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.
    • தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது66). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் குமார் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வண்டலூர் ரெயில் நிலையம் அருகே குமார் வந்தார். திடீரென அவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

    தேனி:

    தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 70). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வருடங்களாக முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
    • இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வி.ஓ.சி வீதி யை சேர்ந்தவர் சின்னசாமி (63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கட்டிட கூலி தொழிலாளி யான சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கள்ளி ப்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவிழா நடந்தது. இந்த விழாவுக்கு சின்னச்சாமி சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அந்த வழியாக வந்த 5 பேருக்கும் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து 2 தர ப்பினரும் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை சின்னசாமி தனது மகன் ரவியிடம் போலீஸ் நிலை யத்திற்கு செல்ல வேண்டும் என கூறி வந்ததாக தெரி கிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் சின்னசாமி வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்தும் அவரது மகன் ரவி வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சின்னசாமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

    இதையடுத்து உடனடி யாக அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் சின்ன சாமியை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சின்னசாமி உடல் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சின்னசாமி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 6 மாதங்களாக கோபால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்காஞ்சிபுரம்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காஞ்காஞ்சிபுரம்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்
    • விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அல்லா ளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 70). இவர், வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
    • இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கங்காதரன் (52). இவரது சகோதரர் மோகன் குமார் (60). பெயிண்டிங் தொழிலாளி.

    கங்காதரனின் மகன் நவீன் கடந்த 4-ந் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதற்கான அவரது 16-ம் நாள் காரியம் நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த மோகன்குமார் மிகுவும் துக்கத்துடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில், வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மோகன்குமார் கோபி, குப்பைமேடு டாஸ்மாக் அருகே நேற்று மதியம் வாந்தி எடுத்த நிலையில் கிடந்துள்ளார்.

    அப்பகுதியினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசேதானை செய்து மோகன்குமார் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.

    தம்பி மகன் இறந்த துக்கம் தாளாமல் மோகன்குமார் மதுவில் விஷம்கலந்து குடித்து உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து, கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது

    ஈரோடு,

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புகளூர்- கொடு முடி ரெயில் நிலையங்களு க்கிடையே நொய்யல் ரெயிவே பாலத்தில் சம்பவ த்தன்று 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    அந்த முதியவரிடம் இருந்த பேப்பரில் மனைவி பெயர் சித்ரா, மகன்கள் பூபதி, பாலமுருகன் மகள்கள் மோனிகா, யாஷிகா என பெயர் எழுதி இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டி திருவாச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (62), இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் முத்துசாமி உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உடல்வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது மனைவி அருக்காணி என்பவர் முத்துசாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×