search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ மாத்திரை தின்று"

    • வயிற்று வலி தாங்க முடியாமல் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர், ராமலிங்கம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தன பாரதி (32). இவரது அத்தை இந்திராணி (71). கடந்த 2 வருடமாக இந்திராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சந்தனபாரதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்திராணி ஏதேதோ கூறிக்கொண்டு முனகி கொண்டிருந்தார்.

    அவரது அருகே சென்று பார்த்த போது அவர் மீது விஷ வாடை அடித்ததால் சந்தேகப்பட்டு சந்தைபாரதி அவரிடம் கேட்டபோது வயிற்று வலி தாங்க முடியாமல் மஞ்சள் மூட்டைக்காக வாங்கி வைத்திருந்த சல்பாஸ் (விஷம்) மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது உடல நிலை மோசமானதால் இந்தி ராணியை காப்பாற்ற இயலாது. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் இந்திராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருள்மொழிஅரசு விஷமாத்திரையை தின்று உயிருக்கு போராடினார்.
    • அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்துள்ள அவல்பூந்துறையை சேர்ந்தவர் அருள்மொழிஅரசு (57). இவர் சித்த மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரையை தின்று சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்மொழிஅரசு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விஷமாத்திரையை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி அரசு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
    • இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.
    • காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (49). இவரது மனைவி விஜயலட்சுமி (42). நாகராஜ் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நாகராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் நாகராஜ் தனது வீட்டுக்கு செல்லாமல் அதேபகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் தங்கி அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அதனால் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.

    உடனடியாக விஜயலட்சுமி தனது தம்பியின் உதவியுடன் நாகராஜை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இதையடுத்து நாகராஜை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார்

    ஈரோடு,

    ஈரோடு, கள்ளுக்கடைமேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கள்ளுக்கடை–மேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×