search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly suicide"

    • உடல்நிலை நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரி, சாவடி தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 70). இவரது மனைவிக்கு பித்தப்பை பிரச்சினை சம்பந்தமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கருணாமூர்த்தி கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ள கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

    அவரது உறவினர்கள் கருணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டல பகு தியை சேர்ந்தவர் வெங்கடரத்தினம் (வயது 68). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பா தையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.

    உடல் நல குறைப்பாட்டினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் ஆசிரமத்தின் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர் .அப் போது வெங்கடரத்தினம் தூக்கில் உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கான திருவண்ண ணாமலை அரசு மருத்துவம் னைக்கு அனுப்பித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த புக்குளம் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 56) .கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணிக்கு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.

    பின்பு உறவினர்கள் இவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்
    • விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அல்லா ளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 70). இவர், வீட்டில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கலவை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தனபால்.
    • இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முதியவர் தனபால் (வயது 85). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனபால் வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலை துண்டான பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை ஆவாரம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை இவரது மகன் அசோகன் (வயது 53) இவருக்கு திருமணமாகி ஆதிலட்சுமி என்கிற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்தில் அவ்வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலை துண்டாகி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே மது குடித்ததை கண்டித்ததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் லெட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 74). மது பழக்கத்துக்கு அடிமையானவர். மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). கட்டிட தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுந்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 31). இவரும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் எதிரில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் புது பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடை முன்பு இன்று காலை முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாகச் சென்றவர் முதியவரின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுபற்றி சமூக ஆர்வலர்கள் ராஜகோபால், சிங் ஆகியோர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரது பையில் விஷ பாட்டிலும், ஒரு செல்போனும் இருந்தது. அந்த செல்போனை எடுத்து விசாரித்தபோது பிணமாக கிடந்த நபர் முளகுமூடு பறைக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பது தெரியவந்தது. இவர் கேரளாவில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

    இந்தநிலையில் மார்த்தாண்டம் வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ராஜேந்திரனுக்கு மனைவி மற்றும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

    ராஜேந்திரன் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மார்த்தாண்டம் பஸ்நிலைய பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 3 முதியவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் ராஜேந்திரனும் பஸ்நிலைய பகுதியில் இறந்து கிடந்தது அந்த பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தர்மாபுரியில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி வழுதாவூர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது68). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளாக நோய் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். நோய் கொடுமை காரணமாக அவ்வப்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் அவரது குடும்பத்தினர் தற்கொலை முயற்சியை தடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் முன்பக்க வாயில்கேட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×