search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை ஆசிரம விடுதியில் முதியவர் தற்கொலை
    X

    திருவண்ணாமலை ஆசிரம விடுதியில் முதியவர் தற்கொலை

    • ஆந்திராவை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டல பகு தியை சேர்ந்தவர் வெங்கடரத்தினம் (வயது 68). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பா தையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.

    உடல் நல குறைப்பாட்டினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் ஆசிரமத்தின் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர் .அப் போது வெங்கடரத்தினம் தூக்கில் உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கான திருவண்ண ணாமலை அரசு மருத்துவம் னைக்கு அனுப்பித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×