search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் தற்கொலை"

    • கிருஷ்ணகிரியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் துடுகனஅள்ளி பக்கமுள்ள திம்மராயனள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவர் கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலைய எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2023-ம் அண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதி க்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் திம்மநாயனஅள்ளியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் இருந்த மரத்தில் கடந்த 25-ந் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மகன் காவேரி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார்.
    • மன உளைச்சலுக்கு ஆளானவர் விஷம் குடித்து மயங்கினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 61). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார்.

    இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்காளை விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்காளை உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • முதியவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகர் அதிகமாகி அடிக்கடி மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நிலை நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரி, சாவடி தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 70). இவரது மனைவிக்கு பித்தப்பை பிரச்சினை சம்பந்தமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கருணாமூர்த்தி கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ள கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

    அவரது உறவினர்கள் கருணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனபால் தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
    • 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 60). தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 5 மகள்கள் பிறந்து 2 மகள்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    ஒரு மகள் மட்டும் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் விரத்தியான மனநிலையில் இருந்த தனபால் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதியவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் :

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது73). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு நெல் வாங்கி வர சென்றார். அப்போது நெல் மூட்டையுடன் தவறி கீழே விழுந்தார்.

    படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே கோம்பையை சேர்ந்தவர் ராமநாதன்(82). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    நத்தம்:

    மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்தவர் அடைக்கன் (55). இவர் வீட்டில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
    • சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் இரட்டிபாளையம் மேல் வீதியை சேர்ந்தவர் அய்யாவு (55). இவர் கடந்த 5 வருடமாக முட்டி வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி கேட்டபோது கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் கைவெட்டி மல்ல நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் பிரபாகரன் (33).

    கடந்த 2 வருடங்களுக்கு முன் ரவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் ரவி தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கைவெட்டியூர் செல்லும் வழியில் உள்ள காலி இடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக உயிரிழ ந்தார்.

    இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • ஆந்திராவை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டல பகு தியை சேர்ந்தவர் வெங்கடரத்தினம் (வயது 68). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பா தையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.

    உடல் நல குறைப்பாட்டினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் ஆசிரமத்தின் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர் .அப் போது வெங்கடரத்தினம் தூக்கில் உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கான திருவண்ண ணாமலை அரசு மருத்துவம் னைக்கு அனுப்பித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.
    • செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெரிய வெட்டுவபாளையம், தலைகரைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (82). தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பெரியசாமிக்கு 2 கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் தான் அடிக்கடி சாவதே மேல் என்று அவர் கூறி வந்துள்ளார்.

    உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று பெரியசாமி வீட்டில் உள்ளவர்கள் சென்னிமலை சென்று விட்டனர். பெரியசாமி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த பெரியசாமி மாடு கட்டும் நைலான் கயிற்றால் வெளியில் உள்ள செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×