search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரளி விதை"

    • கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த புக்குளம் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 56) .கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணிக்கு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.

    பின்பு உறவினர்கள் இவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முன்தினம் மதியம் போதையில் இருந்த தங்கதுரை அரளிவிதையை அரைத்து குடித்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கதுரை பரிதாபமாக இறந்தார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை அடுத்த பள்ளிச்சன் விளையைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 55). கட்டிட தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் மதியம் போதையில் இருந்த தங்கதுரை அரளிவிதையை அரைத்து குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ரெஞ்சித் (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×