search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே அரளி விதையை தின்று தொழிலாளி தற்கொலை
    X

    இரணியல் அருகே அரளி விதையை தின்று தொழிலாளி தற்கொலை

    • முன்தினம் மதியம் போதையில் இருந்த தங்கதுரை அரளிவிதையை அரைத்து குடித்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கதுரை பரிதாபமாக இறந்தார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை அடுத்த பள்ளிச்சன் விளையைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 55). கட்டிட தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் மதியம் போதையில் இருந்த தங்கதுரை அரளிவிதையை அரைத்து குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ரெஞ்சித் (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×