search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் குதித்து"

    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயாத்தாளை காணவில்லை.
    • ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (68). இவரது மனைவி தாயாத்தாள் (65). இவருக்கு கடந்த சில வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த தாயாத்தாளை காணவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கணவர் பழனிசாமி தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட வேலப்பகவுண்டன் வலசு, செம்பாளி தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டி உடல் ஒன்று மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்தபோது அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பது தெரியவந்தது.

    நோய் கொடுமையால் மனமுடைந்த தாயாத்தாள் ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×