search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி"

    காவிரி மற்றும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பள்ளி தோழி ஒருவர் நலம் விசாரித்தார். #ErodeFloods #EdappadiPalaniswami
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு நாள் முழுவதும் காவிரி மற்றும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு, பவானி, கருங்கல் பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து சென்று பார்த்தார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்த போது சில சுராஸ்ய சம்பவங்களும் நடந்து உள்ளது.

    பவானி-குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்றபடி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தை பார்த்தார். அப்போது ஒரு பெண் முதல்வர் அருகே வந்தார்.

    பிறகு அந்தப் பெண் முதல்வரை பார்த்து “ஏனுங்க என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குதா..? பவானி அரசு பள்ளியில் நம்ம ஒண்ணா படிச்சோமே... நலமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

    அந்த பெண்ணை பார்த்து முகம் மலர்ந்த முதல்வரும் “ஆமா..நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா..?” என்று கேட்டார்.

    அந்த பெண்ணும் நல்லா இருக்கேன் என்று கூறினார்.

    பிறகு தன்னுடன் வந்தவர்களிடம் “பவானி வந்ததும் பழைய ஞாபகம் வருகிறது. இந்த பகுதியில் நான் நடந்து செல்லாத இடமே கிடையாது.” என்று கூறி பழைய நினைவை நினைவு கூர்ந்தார் முதல்வர்.

    பவானி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரில் நடந்து சென்ற போது தண்ணீரில் ஒரு செருப்பு மட்டும் தனியாக மிதந்தது. இதை கண்ட முதல்வர்  “ஏம்ப்பா... இங்க ஒரு செருப்பு மிதக்குதே.. யாருடையது?” என்று கேட்டார்.

    அப்போது நிருபர்கள் நின்ற பகுதியிலிருந்து ஒரு நிருபர் “அது என்னுடைய செருப்புதான்” என்று கூறி அதை எடுக்க வந்தார்.

    ஆனால் கூட்டத்தில் அவரால் முன்னேறி வர முடியவில்லை. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வழிவிடுங்க... என்று கூறினார்.

    அனைவரும் அவருக்கு வழிவிட செருப்பை மீண்டும் காலில் அணிந்தபடி அந்த நிருபர் சென்றார். #ErodeFloods #EdappadiPalaniswami
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கோரி முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு மூலம் கருணாநிதி உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது 35) என்ற வாலிபர் பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவு செய்திருந்தார். மேலும் அதில் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.

    இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன் (58) என்பவர் திருப்பூர் தெற்கு போலீசில் கனகசுந்தரம் பரப்பிய அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து புகார் செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த கனகசுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று சொல்ல முடியுமா? என மு.க.ஸ்டாலின் கேள்வு எழுப்பியுள்ளார். #SalemChennaiExpressway #MKStalin
    சென்னை:

    ஜனநாயக உரிமைகளை பறிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த நிபுணர்குழுவை அமைக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, போராட்டங்களை சில அரசியல் கட்சிகள் தூண்டுவதாக பேட்டி கொடுக்கிறார். அவரால் 8 வழி சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று சொல்ல முடியுமா?

    சட்டமன்றத்தில் தூத்துக்குடி என்ற வார்த்தையை பேச முடியவில்லை. இதனால் தூத்துக்குடி என்பதற்கு பதில் சாத்துக்குடி என்று கூறலாமா? என்று கேட்டேன். பொதுமக்கள் பிரச்சினை குறித்து பேசினால் அதை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்.

    சட்டமன்றத்துக்கு செல்வதே வீணாக இருக்கிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டி உள்ளதால் சட்டமன்றத்துக்கு செல்கிறோம். போராட்டங்களை மத்திய- மாநில அரசுகள் ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தை கட்சி ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #SalemChennaiExpressway #MKStalin #EdapadiPalanisamy
    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் கைத்தறி துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #TNAssembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    உடல்நலத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கக்கூடிய சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் தேவை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    எனவே, சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, சிறுதளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

    வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக நடப்பாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைப் பதற்கு விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    காய்கறிகளை பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடுதல், ஏறு கொடிகள் மற்றும் பற்று கொடிகளான காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, வரும் பொங்கல் 2019 முதல் ஜுன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    மொத்தமுள்ள பெடல் தறிகளில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 9,692 பெடல் தறிகள் போக எஞ்சிய 1,558 பெடல் தறிகளுக்கு மேற்படி 6 மாத காலம் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு வரும் 6,975 பெடல் தறிகள் போக எஞ்சிய 4,275 பெடல் தறிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை 5 மாதங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் மொத்தமுள்ள 11,250 பெடல் தறிகளுக்கும் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசின் விலையில்லா சீருடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சீருடைத் துணிகளை பதனீடு செய்வதை முக்கிய பணியாக கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    சீருடைத் துணிகளை பதனிடுவதன் மூலம் இவ்வாலை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய 7 மாதங்கள் முழுமையாக செயல்படுகிறது. மீதமுள்ள 5 மாதங்கள் பதனிடுவதற்கு போதுமான துணி இல்லாததால் குறைந்த திறனுடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையை கருத்திற் கொண்டு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சீருடைத் துணி பதனீட்டு பணி இல்லாத காலங்களில் தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஆலையை தொடர்ந்து லாபத் தில் இயக்க செய்யவும், ஒரு தொகுதிக்கு 2 டன் வீதம் 60 எஸ் கோம்டு நூல் சாயமிடும் திறன் கொண்ட சாயமிடும் அலகு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்படும்.

    தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டை களை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன.

    வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய, போதுமான பட்டு நூற்பு அலகுகள் இல்லை என்பதால், பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பட்டு நூற்பு பிரிவினை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகளை நிறுவிட மாநில அரசின் பங்காக நிதியுதவி பின்வருமாறு வழங்கப்படும்.

    400 முனைகள் கொண்ட மூன்று தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, ஒரு கோடியே 5 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும்.

    200 முனைகள் கொண்ட ஒரு தானியங்கி பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 19 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு தானியங்கி டூபியான் பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 11 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    100 முனைகள் கொண்ட பல்முனை பட்டு நூற்பு அலகுகள் 25 நிறுவிட, மாநில அரசின் பங்காக ஒரு கோடியே 6 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இரண்டு தனியார் பட்டு முறுக்கேற்றும் அலகுகளும், ஒரு அரசு பட்டு முறுக்கேற்றும் அலகும் நிறுவிட, 10 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொண்டு அமர்கின்றேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #Sathanurdam #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2018ஆம் ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முறையே வினாடிக்கு 350 கன அடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.



    இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Sathanurdam #TNCM

    ×