search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu assembly"

    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

    வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?

    தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

    கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.

    இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர்.

    நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.

    எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #TNAssembly
    சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. #TamilnaduAssembly #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது. தினமும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இம்மாதம் 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு, நேற்று மீண்டும் சட்டசபை கூடியது.

    நேற்றைய தினம் செய்தி மற்றும் சுற்றுலாத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

    வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் இன்றைய கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில், ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இன்றைய சட்டசபை கூட்டத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.



    எனவே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இன்றைய கூட்டத்தில் பஞ்சமிருக்காது. இதே பிரச்சினையை தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசும் எழுப்ப இருக்கிறது. #TamilnaduAssembly #EdappadiPalanisamy
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜியும், உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கியுள்ளதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualification
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

    இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.



    சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-

    தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூற முடியாது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிபதிகள் குறைந்த அளவே தலையிட முடியும். சபாநாயகர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

    சபாநாயகர் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மற்றும் இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டும் நீதிமன்றம் தலையிட முடியும். தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்த வழக்கில் இல்லை. 

    கட்சியிலிருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல்தான் என்று கருத வேண்டும் என சுப்ரீம்  கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 

    இவ்வாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

    சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. தகுதி நீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம். ஆளுநரை சந்தித்து மனு கொடுத்ததை ஏற்றுக்கொண்டு கட்சித்தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது.

    அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதனை குலைக்க கொடுக்கவில்லை. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும் ஜக்கையனுக்கு ஒரு முடிவும் சபாநாயகர் எடுத்துள்ளார்.

    இந்த காரணங்களுக்கான சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது.

    இவ்வாறு நீதிபதி சுந்தர் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    மக்களின் உடல்நலன் கருதி எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். #ElectronicCigarette
    சென்னை:

    பீடி, சிகரெட்க்குகளுக்கு மாற்றாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. மால்களிலும், ஆன்லைன் மூலமாகவும் இந்த சிகரெட்டுகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சிகரெட்டில் நிக்கோடினின் அளவு அதிகளவில் இருப்பதாக பல புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், இந்த எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.
    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் கைத்தறி துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #TNAssembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    உடல்நலத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கக்கூடிய சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் தேவை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    எனவே, சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, சிறுதளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

    வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக நடப்பாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைப் பதற்கு விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    காய்கறிகளை பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடுதல், ஏறு கொடிகள் மற்றும் பற்று கொடிகளான காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, வரும் பொங்கல் 2019 முதல் ஜுன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    மொத்தமுள்ள பெடல் தறிகளில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 9,692 பெடல் தறிகள் போக எஞ்சிய 1,558 பெடல் தறிகளுக்கு மேற்படி 6 மாத காலம் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு வரும் 6,975 பெடல் தறிகள் போக எஞ்சிய 4,275 பெடல் தறிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை 5 மாதங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் மொத்தமுள்ள 11,250 பெடல் தறிகளுக்கும் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசின் விலையில்லா சீருடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சீருடைத் துணிகளை பதனீடு செய்வதை முக்கிய பணியாக கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    சீருடைத் துணிகளை பதனிடுவதன் மூலம் இவ்வாலை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய 7 மாதங்கள் முழுமையாக செயல்படுகிறது. மீதமுள்ள 5 மாதங்கள் பதனிடுவதற்கு போதுமான துணி இல்லாததால் குறைந்த திறனுடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையை கருத்திற் கொண்டு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சீருடைத் துணி பதனீட்டு பணி இல்லாத காலங்களில் தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஆலையை தொடர்ந்து லாபத் தில் இயக்க செய்யவும், ஒரு தொகுதிக்கு 2 டன் வீதம் 60 எஸ் கோம்டு நூல் சாயமிடும் திறன் கொண்ட சாயமிடும் அலகு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்படும்.

    தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டை களை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன.

    வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய, போதுமான பட்டு நூற்பு அலகுகள் இல்லை என்பதால், பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பட்டு நூற்பு பிரிவினை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகளை நிறுவிட மாநில அரசின் பங்காக நிதியுதவி பின்வருமாறு வழங்கப்படும்.

    400 முனைகள் கொண்ட மூன்று தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, ஒரு கோடியே 5 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும்.

    200 முனைகள் கொண்ட ஒரு தானியங்கி பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 19 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு தானியங்கி டூபியான் பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 11 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    100 முனைகள் கொண்ட பல்முனை பட்டு நூற்பு அலகுகள் 25 நிறுவிட, மாநில அரசின் பங்காக ஒரு கோடியே 6 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இரண்டு தனியார் பட்டு முறுக்கேற்றும் அலகுகளும், ஒரு அரசு பட்டு முறுக்கேற்றும் அலகும் நிறுவிட, 10 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொண்டு அமர்கின்றேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சட்டசபையை புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படி 500 கிடைக்காது.#TNassembly
    சென்னை:

    சட்டசபையில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு தினசரி ரூ.500 தினப்படி வழங்கப்படும்.

    சட்டசபை நடைபெறும் நாட்களில் லாபியில் வருகைப் பதிவேடு புத்தகம் வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த பதிவேட்டில் கையெழுத்திட்டால் எம்.எல்.ஏ.க் களுக்கு அன்றைய தினப்படியாக ரூ.500 வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பும் ஒருநாள் பின்பும் இந்த தினப்படி வழங்கப்படும்.

    பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் இந்த தினப்படி கிடைக்காது.

    அந்த வகையில் சட்ட சபைக்கு இன்று செல்லாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.500 தினப்படி கிடைக்காது. எத்தனை நாட்களுக்கு போகாமல் இருக்கிறார்களோ அதற்குரிய பணம் கிடைக்காது.

    ஏற்கனவே பஸ் ஊழியர்கள் பிரச்சினைக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து சட்ட சபையில் தி.மு.க. எம்.எல். ஏ.க்களுக்கு ரூ.55 ஆயிரம் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் பெற்று வருகிறார்கள்.

    இதுதவிர நிலுவைத் தொகை ரூ.4½ லட்சமும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படியும் இப்போது “கட்” ஆகிறது. #TNassembly
    ×