search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இ-சிகரெட்டுகள் விற்பனை, பயன்பாடுக்கு தடை என சட்டசபையில் அறிவிப்பு
    X

    தமிழகத்தில் இ-சிகரெட்டுகள் விற்பனை, பயன்பாடுக்கு தடை என சட்டசபையில் அறிவிப்பு

    மக்களின் உடல்நலன் கருதி எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். #ElectronicCigarette
    சென்னை:

    பீடி, சிகரெட்க்குகளுக்கு மாற்றாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. மால்களிலும், ஆன்லைன் மூலமாகவும் இந்த சிகரெட்டுகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சிகரெட்டில் நிக்கோடினின் அளவு அதிகளவில் இருப்பதாக பல புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், இந்த எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.
    Next Story
    ×