என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 215416"

    100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர் சிவகங்கை எம்.எல்.ஏ.புகார் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

    அதன் ஒரு பகுதியாக சாத்தரசன்கோட்டை அருகே உள்ள குருந்தங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளில்  கிராம மக்களை  சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டாக சிவகங்கை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. என்பதாலேயே ஆளுங்கட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு நல திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை.  

    சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிவகங்கை தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை   வைத்த போது அந்த கல்லூரியை ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக்சிதம்பரம் கோரிக்கை வைத்ததால் காரைக்குடி தொகுதிக்கு அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
       
    மேலும் கடந்த ஓரு ஆண்டுகளில் முறையாக சாலை வசதிகளோ,   விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரமோ முறையாக வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கியுள்ளதாக கூறி வேலை தராமல் திரும்பி அனுப்பி வருகின்றனர். 
     
    இது குறித்த கோரிக்கைகளே அதிகளவில் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.மேலும் சிவகங்கை தொகுதி இதுபோல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தொகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையை புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படி 500 கிடைக்காது.#TNassembly
    சென்னை:

    சட்டசபையில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு தினசரி ரூ.500 தினப்படி வழங்கப்படும்.

    சட்டசபை நடைபெறும் நாட்களில் லாபியில் வருகைப் பதிவேடு புத்தகம் வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த பதிவேட்டில் கையெழுத்திட்டால் எம்.எல்.ஏ.க் களுக்கு அன்றைய தினப்படியாக ரூ.500 வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பும் ஒருநாள் பின்பும் இந்த தினப்படி வழங்கப்படும்.

    பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணித்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்தால் இந்த தினப்படி கிடைக்காது.

    அந்த வகையில் சட்ட சபைக்கு இன்று செல்லாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.500 தினப்படி கிடைக்காது. எத்தனை நாட்களுக்கு போகாமல் இருக்கிறார்களோ அதற்குரிய பணம் கிடைக்காது.

    ஏற்கனவே பஸ் ஊழியர்கள் பிரச்சினைக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து சட்ட சபையில் தி.மு.க. எம்.எல். ஏ.க்களுக்கு ரூ.55 ஆயிரம் சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எம்.எல்.ஏ.க்கள் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் பெற்று வருகிறார்கள்.

    இதுதவிர நிலுவைத் தொகை ரூ.4½ லட்சமும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தினப்படியும் இப்போது “கட்” ஆகிறது. #TNassembly
    ×