search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில்"

    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.

    • பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும்.
    • பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    சென்னை தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பல்லாவரம் பயணிகள் மட்டுமின்றி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, குன்றத்தூர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் மாணவ மாணவிகள் பல்லாவரம் ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாதர் கோவிலும் இங்கு உள்ளது.

    பெண்கள் அதிக அளவில் வேலை செய்யும் தொழில் கூடங்கள், புதிய குடியிருப்பு அதிக அளவில் இருப்பதால், பல்லாவரம் ரெயில் நிலையத்தில், அதிகாலையில் இருந்து, நள்ளிரவை தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன.

    கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, இரவு 9:30 மணிக்கு மேல் தான் மீண்டும், மின்சாரம் வந்தது. அதற்கு முந்தைய வாரத்திலும் இதேப்போல் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பல்லாவரம் ரெயில் நிலையம் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.

    இதனால் ரெயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


    இதனால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும் தங்கள் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் நடந்து செல்கின்றனர். அதேப்போல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பிளாட்பாரத்தில் வருகின்ற ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்கு செல்கிறது என்பதை காட்டும் டிஸ்ப்ளே போர்டில், விளக்குகள் எரியாமல், இருள் அடைந்து விடுவதால், வருகின்ற ரெயில் எங்கு செல்வது செல்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    படிக்கட்டுகள் இருளடைந்து கிடப்பதால், வயதானவர்கள் படிகளில் ஏறி வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு சுவாதி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களில், இதுவரையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படவில்லை.

    பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததை மர்ம கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் பெண் பயணிகள், பீதியில், தினமும் பயணித்து வருகின்றனர்.

    எனவே ரெயில்வே நிர்வாகம், உடனடியாக பல்லாவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு, இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் உபயோகிப்பதற்கான இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரை அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, பாதுகாப்புக்காக பெண் போலீசார் உள்ளிட்ட காவலர்களை, பணியில் அமர்த்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம்.
    • மாணவன் சீருடையில் இருந்துள்ளான்.

    சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அபாயகரமான பயணம் அவ்வப்போது தொடர்கிறது.

    உயிரை பொருட்படுத்தாமல் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இது போன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரெயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் சென்னையில் தொடர் கதையாக நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொது மக்களை பதற வைத்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் திடீரென பதறவைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கிய படி பயணம் செய்தார்.

    100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரெயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பல ரெயில்களை கடந்து மாணவன் தொங்கிய படி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ? ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியது.

    மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ரெயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போது போகும்போதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரெயில்வே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்த தீர்வு ஏற்படும்.

    • ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை-2 மகள்கள் மின்சார ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்தில் முடிக்கப்படாத சுரங்கநடைபாதை பணி மற்றும் மேம்பாலப்பணியே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

    அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

     


    மேம்பால பணிகள், ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

    இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சுரங்கப்பாதை அமைப்பதற்கு தனிநபரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் செல்வ நம்பி, கணேசன், ரெயில்வே துறை கோட்ட பொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.

    • பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
    • மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.


    ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.

    ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

    தியாகராஜன்

    தியாகராஜன்

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.

    வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.

    ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-

    தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

    ஜோதி விஸ்வநாதன்

    ஜோதி விஸ்வநாதன்

    இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    • ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 150 ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஆனால் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் தொடங்கியது. ரூ.734 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் உள்ள 5 கி.மீ தூரத்தில், 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

    ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் இருந்து பரங்கிமலையை இணைக்கும் வகையிலும் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம் ரெயில் பாதையின் மேலே 100 அடி உயரத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த இரும்பு பாலத்துக்காக 51 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தி இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிக்காக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை 54 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. முதல் நாளான நேற்று மட்டும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இன்னும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி இன்று இரவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பறக்கும் ரெயில் பணிக்காக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் 6 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்படுகிறது.

    முதல் நாளான நேற்று 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணியில் 100 என்ஜினீயர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மீதமுள்ள பணிகள் இன்று இரவு 11 மணிக்கு மேல் தொடங்கும்.

    இன்னும் 2 நாட்களில் மேலும் 3 இரும்பு கிரீடர்கள் பொருத்தும் பணி முடிவடைய வாய்ப்பு உள்ளது. இந்த இரும்பு கிரீடர்கள் ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை. மொத்தம் 6 கிரீடர்கள், அவற்றை பொருத்துவதற்கான இரும்புகள் என மொத்தம் 540 டன் எடை கொண்டவை. மீதமுள்ளவற்றில் 2 இரும்பு கிரீடர்கள் தண்டவாள பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. இன்னும் ஒரு இரும்பு கிரீடர் வெளியே உள்ளது. அதுவும் தண்டவாள பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும்.

    வருகிற மார்ச் மாதத்துக்குள் முழு பணிகளையும் முடித்து இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையம் வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
    • இதனால் அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்தே மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி இன்று காலை 6 மணியளவில் அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கடற்கரை நோக்கிச் செல்லவேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் நிலையத்தை தாண்டி இந்து கல்லூரி ரெயில் நிலையத்தை நோக்கிச் சென்றது.

    சிறிது தூரம் சென்ற நிலையில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கி நின்றது. 4 பெட்டிகள் தடம் புரண்டு காணப்பட்டன. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலை ஓட்டிச் சென்ற டிரைவர் ரவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ரெயில் தடம் புரண்டிருப்பது தெரியவந்தது.

    ரெயில் தடம் புரண்டது பற்றி கேள்விப்பட்டதும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கோட்ட மேலாளர் வினோத், ஊழியர்களுடன் சென்று தடம் புரண்ட மின்சார ரெயிலை தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதி, கோவை, பெங்களூர் செல்லும் ரெயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கும், 9.50 மணிக்கும் என 2 ரெயில்கள் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில்களில் 7 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ரத்து செய்யப்பட்டது. விடுமுறை தினமான இன்று திருப்பதி செல்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    9.50 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ஒரு மணி நேரத்தைக் கடந்தும் புறப்படவில்லை. அந்த ரெயில் எப்போது செல்லும் என்கிற அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது ஆவடியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் 9.50 மணிக்கு செல்ல வேண்டிய ரெயிலை தாமதமாக இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதேபோன்று, திருவள்ளூர் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு மாற்று பாதை வழியாக வந்தன. இந்த ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக சென்ட்ரல் வரையில் இயக்கப்படவில்லை.

    ரெயில் நிலையத்துக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே ரெயில்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் அங்கிருந்து இறங்கி பயணிகள் தண்டவாளத்தின் வழியே நடந்தே சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

    இதுபோன்று நிறுத்தப்பட்ட ரெயில்கள் சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகே சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தை வந்து சேர முடிந்தது. இதன் காரணமாக இன்று காலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஆவடி வழியாக புறப்பட்டு வந்த ரெயில் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தடம் புரண்ட மின்சார ரெயிலை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வழக்கம்போல ஆவடி வழியாக அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை- நெல்லை இடையே முழு நேர மின்சார என்ஜின் கொண்ட ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த ரெயிலுக்கு தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவரும், தென்காசி ரெயில் பயணிகள் நல சங்க தலைவருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் தென்காசி ரெயில் நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அப்போது மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி நகர ம.தி.மு.க. செயலாளர் கார்த்திக், ரெயில் பணிகள் நல சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தபவன் காதர் மைதீன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் அ.சேக்பரித், மைதீன், சன் ராஜா மற்றும் வக்கீல்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 10, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×