search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் மாநக ராட்சி 17-வது வார்டுக் குட்பட்ட நெசவாளர் காலனி குறுக்கு தெருக்களில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள அலங்கார தரைகற்கள் மறுசீரமைக்கும் பணி,

    46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி, வி.ஐ.பி. கார்டன் மெயின் ரோட்டில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    28-வது வார்டுக்குட்பட்ட சவேரியார் கோவில் பின்பு றம் உள்ள தெருக்களில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, வீரசூரபெருமாள், ரமேஷ், அனந்த லெட்சுமி, மாநகர துணைச்செயலாளர் ராஜன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, துரை, அணிகளின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், பீட்டர் வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், பெரி, முருகன், முத்து கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படுகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக உள்ளது. தற்போது மழை காரணமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.

    இதுபோதாதென்று சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்களது இஷ்டத்துக்கு மாடுகளை முக்கிய சாலைகள், தெருக்களில் அவிழ்த்து விடு கின்றனர்.

    அவைகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் அமர்ந்தும், குறுக்கே இடைமறித்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர்.

    பெரியார் பஸ் நிலையம், 4 மாசி வீதிகள், 4 வெளிவீதிகள், காமராஜர் சாலை, வில்லா புரம்-அவனியாபுரம் ரோடு, திருப்ப ரங்குன்றம், கைத்தறி நகர், காளவாசல், பை-பாஸ் ரோடு களில் மாடுகள் அணிவகுத்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும்.

    குப்பை தொட்டிகளை தேடி செல்லும் மாடுகள் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் நடுரோட்டி லேயே மாடுகள் சண்டையிடு வதும், சில நேரங்களில் மிரள் கின்றன.இதனால் வாகனங்கள் மீது மாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை யில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மாடுகள் முகாமிடு கின்றன. பல மணிநேரம் சாலை யில் அசைபோட்டவாறு நிற்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பூமார்க்கெட், சிக்னல் பகுதிகளில் மாடுகளின் தொல்லையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் இடையூறால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகளில் பால் கறந்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அதனை கொட்டகையில் அடைக்காமல் ரோட்டில் விடுகின்றனர். அவைகள் சிறிய தெருக்கள் முதல் முக்கிய சாலை வரை ஆக்கிரமித்து பொதுமக்க ளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறது. எனவே மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போரை கணக்கெடுத்து அவர்கள் மாடுகளை ரோட்டில் விடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    பை-பாஸ் ரோட்டில் மாட்டு கொட்டகைகள்

    மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி சர்வீஸ் சாலைகளை மாடு வளர்ப்போர் சிலர் கொட்டகையாக பயன்படுத்தி மாடுகளுக்கு தீணிகள் மற்றும் தண்ணீர் வைத்து அங்கேயே பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி சாலைகளில் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், நவ.7-

    நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 37-வது வார்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சி லர்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகி கள் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார். இன்று 6-வது வார்டுக்குட்பட்ட நீல நாடார் தெரு, மூன்லைட் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7-வது வார்டுக்குட் பட்ட பள்ளிவிளை, ஆதி சக்தி தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதால் ரத்து.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாந கராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .

    இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes, 

    மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு, வடக்கு தெருவில் (பிஷப் ஹவுஸ் ரோடு) ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 41-வது வார்டுக்குட்பட்ட சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் சீரமைப்பு பணி, 48-வது வார்டுக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு, பிர்தவுசியா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி போன்றவையும் இன்று நடந்தது. இந்தப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், தொழில் நுட்ப உதவியாளர் அரவிந்த், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோனா கிறிஸ்டி, அனிலா, பியாசா ஹாஜிபாபு, பகுதி செயலாளர் சேக் மீரான், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், பீட்டர் வட்ட செயலாளர்கள் ஆதித்தன், கரீம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ளது
    • ஒலிம்பிக் அகடமிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்
    • மாநகராட்சியிடம் விளையாட்டு துறை கேட்கிறது


    திருச்சி


    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 டிசம்பர் 29ம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திருச்சியில் ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.


    அந்த ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகாமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


    இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 574 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இந்த அகாடமிக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.


    இந்த நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளதால் மேலும் 20 ஏக்கர் நிலம் அதே பகுதியில் ஒலிம்பிக் அகாடமிக்கு ஒதுக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளது.


    இதற்காக புதிய முன்மொழிவை அனுப்ப உள்ளனர்.


    ஒலிம்பிக்கில் பாஸ்கெட் பால், வாலிபால், சைக்கிளிங், ஆக்கி, ஃபுட்பால்,டென்னிஸ் ஸ்விம்மிங் என மொத்தம் 168 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. ஆகவே அனைத்து விளையாட்டுகளையும் நடத்துவதற்கு விசாலமான இடவசதி மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.


    இதற்கிடையே அந்த பகுதியில் நவீன கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறும் போது,


    ஒலிம்பிக் அகாடமிக்கு 30 ஏக்கர் போதுமானதாக இருக்காது. ஆகவே மேலும் 20 ஏக்கர் நிலம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டிருக்கிறோம். இதனை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்கும் என நம்புகிறோம் என்றார்.




    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது

    நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி, பாரதி தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, ஏசுபக்தன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 32-வது வார்டுக்குட்பட்ட சைமன் நகர் 5-வது குறுக்கு தெருவில் ரூ.18.72 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, 23-வது வார்டுக்குட்பட்ட கே.பி. ரோடு, கிறாஸ் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது போன்ற பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிகி, சிஜி பிரவின், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் துரை, சேக் மீரான், இளைஞரணி சரவணன், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் மைக்கேல் ராஜ், சுரேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் உறுதி
    • பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி அலுவலகத்தில் வாரந் தோறும் வியாழக்கிழ மை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.

    வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டன. அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-

    மனுக்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறைக்கு உட்பட்ட 103 மனுக்கள் வந்தன. அதில் 103 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது. அதுபோல் நகர அமைப்பு தொடர்பாக 43 மனுக்கள் வந்ததில் 38 மனுக்களும், சுகாதாரத் துறைக்கு 30 மனுக்களில் 28 மனுக்களும் , பொதுவான மனுக்கள் 8 வந்தது. இதில் அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 285 மனுக்கள் வந்துள்ளன. இதில் 278 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 7 மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. நாகர்கோவில் நகரப் பகுதியில் சாலை போடப்பட்டு வருகிறது. இதில் சாலை நடுவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை மற்றும் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் பாதிப்பு இருப்பதாக புகார்கள் வருகிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மேன் கோல் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைதீர்க்கும் கூட்டத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் இன்று ரூ.75 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்தது. 50வது வார்டுக்கு உட்பட்ட வண்டிகுடியிருப்பு தெற்கு தெரு வில் ரூ.2.5 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்தபணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அதேபோல் 42-வது வார்டுக்கு உள்பட இருளப்ப புரம் விவேகானந்தர் சாலையில் தார்தளம் அமைக்கும் பணி ரூ.30 லட்சம் செலவி லும், 20-வது வார்டுக் குட்பட்ட தம்மத்துக்கோணம் திருவள்ளுவர் தெருவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ரூ.13 லட்சம் செலவிலும், 23-வது வார்டுக் குட்பட்ட பரிவதவர்த்தினி சாலையில் ரூ.30 லட்சம் செலவிலும் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர் ஸ்டாலின் தாஸ், தி.மு.க. பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் பகவதி பெரு மாள், இருளப்பபுரம் ஊர் தலைவர் தனபாலன், பொருளாளர் பாரத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 45-வது வார்டுக்கு ட்பட்ட தம்மத்துக்கோணம் ஏ.டி. அம்பிகா சாலையில் (அரசு நடுநிலைப் பள்ளி அருகில்) ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 14-வது வார்டுக்குட்பட்ட பெரியார் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.

    11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மாநக ராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சி லர்கள் சதீஷ், கலாராணி, ஸ்ரீலிஜா, ஜெயவிக்ரமன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலை வர் ஜவகர், பகுதி செயலா ளர்கள் ஜீவா, சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், தொண்டர் அணி ராஜன், மாநகர திமுக தலைவர் பன்னீர் செல்வம் வட்டச் செயலாளர் சிவ குமார், வேல்முருகன், புனித பிரசாத் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×