search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு"

    • வீடு புகுந்து 4 பேர் கும்பல் வெறிச்செயல்
    • ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    நேற்று இரவு அரவிந்த் தனது வீட்டில் இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அரவிந்தை சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பலத்த காயம் அடைந்த அரவிந்த், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அரவிந்துக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் தான் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

    மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    திக்கணங்கோடு மாத்திர விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சேவியர் (வயது 42). இவர் தனது மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து ஜஸ்டின் சேவியர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் கோட்டார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.

    சமீபகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சிக்கு கடந்த 2008-09-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கியது. இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் விதிமுறைகளை மீறி நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக விருது நகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்திடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த உள்ளாட்சி அமைப்பு மன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் 8பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இது தொடர்பாக பாண்டுரங்கன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு போலீஸ் சூப்பி ரண்டு 8வாரங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நடவ டிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • கல்வித்தகுதி இல்லாமல் யாராவது சிகிச்சை அளிக்கிறார்களா? என்ற சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
    • குமரி மேற்கு மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன

    நாகர்கோவில் :

    போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி டாக்டர்களை கண்டறிய அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி குமரி மாவட்டத்திலும் உரிய கல்வித்தகுதி இல்லாமல் யாராவது சிகிச்சை அளிக்கிறார்களா? என்ற சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்படி யாரேனும் செயல்பட்டால், அவர்களை பற்றி தகவல் தரவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த சூழலில் குமரி மேற்கு மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படிப்பை படித்து விட்டு அதற்கு மாறாக சிலர் போலியாக சிகிச்சை அளிப்பது தெரி யவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    போலி மருத்துவர்களை கண்டறிய போலீஸ் டி.ஜி.பி. அறிவுறுத்தலின் படி, மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறையினர், சப்-கலெக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து போலி மருத்துவர்கள் யாராவது செயல்படுகிறார்களா? என சோதனையில் இறங்கி உள்ளோம். பொதுமக்கள் புகார் அளிக்கவும் அறிவு றுத்தினோம்.

    இந்த சூழலில் 2 புகார்கள் வந்தன. அது பற்றி விசாரித்து வருகிறோம். அவர்கள் படித்தது வேறு, ஆனால், சில சிகிச்சைகளை அளிக்கின்றனர். உரிய கல்வித்தகுதி இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.
    • பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர். விடுதலைக்கு பின் அவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தங்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடி நரிக்குறவர்களுக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி இதே மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு குறைவான விலையில் விற்று வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிரியாரின் ஆபாச படங்களை பரப்பியோர் மீது நடவடிக்கை
    • மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த முகாம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    நாகர்கோவில், மார்ச்.22-

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்ப்பட்டு அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் புதன் கிழமை மாவட்டத்தில் உள்ள 4 சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கி யிருந்த புகார் மனுக்களை நேரடியாக விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டதை தொடர்ந்து புகார் மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வரவ ழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்றும் புகார்மனுதாரர்கள் எதிர்மனு தாரர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவ ழைக்கப்பட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில் தக்கலை குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 100 பேர் விசாரணைக்கு வந்திருந்த னர். புகார் மனு தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் விசா ரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரடி விசாரணை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார் அளிப்பார்கள். அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் செய்வார்கள். இதை தவிர்க்கும் பொருட்டு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தால் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

    முதலில் தினமும் 100 மனுக்கள் வந்து கொண்டி ருந்தது. தற்பொழுது மனுக்களின் வருகை குறைந்துள்ளது. இதுவரை 800 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த முகாம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீசாரால் கைது செய் யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் பாதிரி யாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். பாதிரி யாரின் ஆபாச படங் களை வெளியிட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுப்பது தொடர் பாக பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.பெண் களின் ஆபாச படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது.
    • வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர் :

    பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த இளைஞர் திருப்பூரில் படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை ஆய்வு செய்தபோது மதுபானியைச் சேர்ந்த ஷம்பு முகையா என்ற இளைஞர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    ஷம்பு முகையா தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார். தனது தங்கையின் திருமணம் நின்று விட்டதால் அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த மனைவி சரண்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் ஷம்பு முகையா மீன் வாங்கும்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்று பொய்யான செய்தியை பரப்பிய நபர் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

    • கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது போலியான வீடியோ என அரசு மறுத்துள்ளது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று இந்த நிறுவனத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இந்தியில் பேசி கலந்துரையாடினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதுபோன்ற வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். தொடர்ந்து நீங்கள் வேலை பாருங்கள் என அறிவுரை கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இவர்களிடம் பேசிய பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் பயமின்றி பணியாற்றி வருவது தெரியவந்தது.

    ஊரில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் வீடியோக்களை அனுப்பி இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு ஏதாவது குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்நேரம் வேண்டும் ஆனாலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் நியமிக்கப்பட்டார்.
    • தமிழக-கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணராஜ் சமீபத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் நியமிக்கப்பட்டார்.

    புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். பொதுமக்களின் மனுக்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    தமிழக-கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். குற்ற செயல்கள் நடைபெறுவது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வந்த சூப்பிரண்டு சாம்சனுக்கு மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    • வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இன்று 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த முகாமில் ஏற்க னவே போலீஸ் நிலை யத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது மக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

    மேலும் மனு அளிப்ப தற்காக மாற்றுத்திறனாளி களும் வந்திருந்தனர். அவர்களை போலீசார் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்று லிப்ட் மூலமாக கூட்ட ரங்கிற்கு கொண்டு சென்ற னர். அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கினார். அதோடு அவர்கள் அருகில் அமர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    • வாராந்திர சிறப்பு முகாமில் நேரடியாக சந்திப்பு
    • உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.

    இதற்காக போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு காலை முதல் மதியம் வரை இன்ஸ்பெக்டர் தலை மையில் 3-க்கும் மேற்பட்ட போலீசார் புகார் மனுக்களை பெறுகின்றனர். மேலும் அவ்வப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார்.

    இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் ஒரு சிலர் தங்களுடைய புகார் தொடர்பாக நடவ டிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் வந்து மனு கொடுக்கின்றனர்.

    எனவே அதுபோன்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விரைந்து விசாரணை நடத்தும் வகையிலும் புதிய நடைமுறையை தற்போது அரசு அமல்படுத்தி உள்ளது.

    அதாவது ஏற்கனவே மனு அளித்தும் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி அடையாதவர்களிடம் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மனுக்கள் பெற்று 15 நாட்களுக்குள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை தோறும் நடை பெற்று வருகிறது.

    இன்று நடந்த சிறப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உறுதி அளித்தார்.

    இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு வழங்கினார்கள்.மேலும் போலீசார் தங்களது குறை களை தெரிவிப்ப தற்காக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் உள்ள மனுக்களையும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் எடுத்து பார்வை யிட்டார்.

    ×