search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சன்"

    • தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் நியமிக்கப்பட்டார்.
    • தமிழக-கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணராஜ் சமீபத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாம்சன் நியமிக்கப்பட்டார்.

    புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். பொதுமக்களின் மனுக்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    தமிழக-கேரளா எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். குற்ற செயல்கள் நடைபெறுவது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வந்த சூப்பிரண்டு சாம்சனுக்கு மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    ×