search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு"

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திடீரென்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான போலீசாரின் சோதனை எவ்வாறு உள்ளது? அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சோதனைச்சாவடி இந்த எளாவூர் சோதனைச்சாவடி ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த எளாவூர் சோதனைச்சாவடி என்பது, ஆந்திர மாநிலம் இருந்து விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கான முக்கியமான நுழைவு வாயில் ஆகும். அதனால் இங்கு எல்லா வாகனங்களும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பணியில் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச்சாவடி இன்றி சுற்றி உள்ள பிற வழிகளில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஆந்திர போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.

    ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    • குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம், விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்க 9363495720 இந்த தொலைபேசியின் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    • டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • நாகரில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகைகளை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடையில் வரும் பெண்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விடுகிறார்கள்.

    சமீபகாலமாக நடந்து வரும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடி க்கைகளை மேற்கொண்டார். வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பெண் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறா ர்கள்.

    மேலும் சந்தேகப்ப டும்படியாக பஸ்களில் பெண்கள் யாராவது பயணம் செய்தால் தகவல் தெரிவிக்குமாறு டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். டிரைவர், கண்டக்டரிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பஸ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டுஅறை அல்லது ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பஸ்களில் அதிகமான கூட்டங்களை ஏற்றி செல்லக்கூடாது. படிக்க ட்டில் யாரையும் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார். இதை த்தொடர்ந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததுடன் அறிவு ரைகளை வழங்கினார். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டும்போது நமது உயிரை பாதுகாக்க கூடிய ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று வாலிபர்களுக்கு அறிவுரை களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால் ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இது தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பஸ் டிரைவர், கண்டக்டர்க ளுக்கும் பல்வேறு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் ஹெல்மட் அணிய தொடங்கி விட்டனர். சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்ப ட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள்.

    ஒரு சிலர் ஹெல்ெமட்டை மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து ஓட்டி செல்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் ஹெல்மெட்டை அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.

    ஹெல்மெட் அணியாத வர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகன ங்கள் ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும். ஒரே மோட்டார் சைக்கிள்களில் 3 பேரை ஏற்றி செல்வதும் குற்றமாகும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க நவீன எந்திரம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சப்-டிவி ஷனுக்குட்பட்ட பகுதியில் அந்த நவீன எந்திரம் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதில் நாம் வாகனத்தை எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுகிறோம் என்ற விவரம் தெரிந்துவிடும். ஒரு சாலையில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்ல வேண்டுமோ அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

    கூடுதல் வேகமாக செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியிலும் இந்த நவீன எந்திரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். கார்களை ஓட்டும்போது கட்டாயம் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். முன் இருக்கையில் இருப்பவ ர்களும் சீட் பெல்ட் அணி வது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்

     விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சா சாங் சாய் நள்ளிரவு 11 மணியளவில் சாதாரண உடையில் வந்து திண்டிவனம் கோட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்.ஊர்வலம் செல்வது குறித்தும் எப்படி விநாயகர் சிலையை நீர் நிலையங்களில் கரைப்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.

    • சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் கண்டறியப்பட்ட தோடு, அவர்கள் திருடி வைத்திருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறி வதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற்று தருவதற்கும், உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முடிவு செய்தார். அதன்படி பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட 50 பேரை நேரில் வரவழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    • அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.
    • ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    சேலம்:

    டெல்லியை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவதற்காக மாற்று கல்லீரல் பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் விபத்தில் மூளைச்சாவடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கல்லீரலுக்காக பதிவு செய்து காத்திருந்த டெல்லியை சேர்ந்தவருக்கு, இளம்பெண்ணின் கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் கல்லீரல் கோவை மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் அவசரம் கருதி சீருடையிலேயே உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அங்கு ரத்த தானமும் செய்தார்.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி நேற்று காலை 6 மணி அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தற்போது கல்லீரல் பொருத்தப்பட்டவர் நலமாக உள்ளார்.

    இதையடுத்து கால நேரம் பாராமல் உடனடியாக வந்து ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த பல்வேறு தரப்பினரும், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் கடைகள், நுகர்வோர் வாணிப கழக கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பெருந்துறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசி சரியான அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.

    மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதையும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடை போட்டு அவர் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிதாக 55 போலீசார் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளனர்.
    • சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசார் வெவ்வேறு போலீஸ் நிலை யங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். விருப்ப பணியிடம் அடிப்ப டையில் பலருக்கும் அவர்கள் கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஆயுதப் படையில் புதிதாக 55 போலீசார் சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ள னர். இவ்வாறு பணி மாறுதல் பெற்றுள்ள போலீ சாருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கி னார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆயுதப்படை போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள் கிறேன். ஆயுதப்படைக்கும் போலீஸ் நிலைய பணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஆயுதப்படையில் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே சென்றிருப்பீர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் அப்படி இருக்காது. மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் செல்ல வேண்டி இருக்கும். பொறுமையாக செயல்பட வேண்டும். பொறுமையாக இருந்தாலே பல பிரச் சினைகள் வராது. பணி மாறுதல் பெற்றுள்ள வர்களின் செயல்பாடுகள் 6 மாதம் தொடர்ந்து கண் காணிக்கப்படும். பணியில் சரியாக செயல்படவில்லை என்றால் மீண்டும் அவர்கள் ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இரவு நேர ரோந்து பணியில் அலட்சியமாக இருக்கக்கூ டாது. பண விவகாரங்கள், சொத்து விவரங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்யா தீர்கள். பண மோசடி வழக்கில் உரிய ஆதாரம் இருந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நில பிரச்சனையை பொறுத்தவரை டாக்கு மெண்ட் சரியானதுதானா? நிலத்தின் உரிமையாளர் உண்மையில் யார்? என்ப தற்கான ஆதாரம் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு மோசடி நடந்திருப்பது உறுதியானால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையில் வருகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு தினமும் ½ மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப் பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண் டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு பைக் ஓட்டி சென்றார். அவர் உடனடி யாக சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். எனவே பெண் போலீசார் உள்பட அனைத்து போலீசாரும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு ரோந்து பணியிலும் அலட்சி யம் காட்டக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
    • தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடத்தலை தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்கும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
    • கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காா்த்திக் தற்போது சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதை தொடர்ந்து மதுரை தெற்கு மண்டலக் காவல் துணை ஆணையராக இருந்த தங்கதுரை, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இடமாறுதலுக்குள்ளான காா்த்திக்கிடமிருந்து பொறுப்பை தங்கதுரை ஏற்றுக்கொண்டாா்.

    அப்போது அவா் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம். மகளிா், பெண்கள் தொடா்பான புகாா்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுப்ப தற்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் முக்கிய தகவல்கள், குற்றஞ்சாா்ந்த துப்புகள், காவல்துறை சாா்ந்த குற்றச்சாட்டுகள், குறைகள் மற்றும் தனிப்பட்ட புகாா்களை 76038 46847 என்ற காவல் கண்காணிப்பாளரின் தனி கைப்பேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக பொறுப்பேற்ற எஸ். பி. தங்கதுரைக்கு, இடமாற்றப்பட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேசியஸ், துணைக் கண்காணிப்பாளா்கள் ராஜா, பிரிட்டோ, சுபாஷ் உள்ளிட்டோா் பூங்கொத்து அளித்து வாழ்த்தினா்.

    ×