search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு
    X

    பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் விசாரித்தார்.

    பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு

    • வாராந்திர சிறப்பு முகாமில் நேரடியாக சந்திப்பு
    • உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.

    இதற்காக போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு காலை முதல் மதியம் வரை இன்ஸ்பெக்டர் தலை மையில் 3-க்கும் மேற்பட்ட போலீசார் புகார் மனுக்களை பெறுகின்றனர். மேலும் அவ்வப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார்.

    இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் ஒரு சிலர் தங்களுடைய புகார் தொடர்பாக நடவ டிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் வந்து மனு கொடுக்கின்றனர்.

    எனவே அதுபோன்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விரைந்து விசாரணை நடத்தும் வகையிலும் புதிய நடைமுறையை தற்போது அரசு அமல்படுத்தி உள்ளது.

    அதாவது ஏற்கனவே மனு அளித்தும் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி அடையாதவர்களிடம் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மனுக்கள் பெற்று 15 நாட்களுக்குள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை தோறும் நடை பெற்று வருகிறது.

    இன்று நடந்த சிறப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உறுதி அளித்தார்.

    இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு வழங்கினார்கள்.மேலும் போலீசார் தங்களது குறை களை தெரிவிப்ப தற்காக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் உள்ள மனுக்களையும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் எடுத்து பார்வை யிட்டார்.

    Next Story
    ×