search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    மீனாட்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    திக்கணங்கோடு மாத்திர விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சேவியர் (வயது 42). இவர் தனது மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து ஜஸ்டின் சேவியர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் கோட்டார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.

    சமீபகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×