search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவனுக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு விரைந்து சென்று சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    மினி சரக்கு லாரி

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது 700 கிலோ எடை கொண்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஓட்டி வந்த கர்நாடகவை சேர்ந்த அஜய்குமார் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    டிரைவர் பெங்களூரில் இருந்து மேட்டூருக்கு போதை பொருட்களை கடத்தி செல்வதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • போதைப் பொருட்கள் விற்பதைக் குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொது மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.சூலூர் பதுவ ம்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    போதை பொருட்கள் விற்கப்படுவதாலும், அதனை வாங்கி சாப்பிடுபவர்களாலும் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கோவை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா, 28-வது வார்டு கண்ணகி ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோவை சத்தி சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோனுக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாதை ஒன்று உள்ளது. தற்போது இந்த பாதையை சீரமைக்கும் பணியை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

    சத்தி சாலையில் இருந்து அந்த பாதை நுழையும் இடத்தில், நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட ஏதுவாக, வாயில் கதவு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அமைத்தால் மேற்கண்ட 3 வார்டுகளை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் சத்தி சாலையிலிருந்து, அவினாசிக்கு செல்வோர் 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    சென்னையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தனுஷ். இவரது நண்பர் சந்துரு. இவர்கள் 2 பேரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டிக்கு சுற்றுலா வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது தனுஷ் அடித்து செல்லப்பட்டார்.

    அவரை காப்பாற்ற முடியாததால் சந்துரு கொடைக்கானல் மற்றும் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் கொடுத்தார். கடந்த 2 நாட்களாக படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தனுஷ் பிணமாக மீட்கப்பட்டார். பூண்டி ஏரியில் ஆழமான பகுதியில் சென்றபோது சேற்றில் சிக்கி அவர் பலியாகி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மலை கிராமங்களில் அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    போதை காளான் மோகத்தில் வாலிபர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வாலிபர் போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. போதை வஸ்துக்கள் தேடி இளைஞர்கள் உடல் நலம் மற்றும் உயிரை இழப்பது தொடர் கதையாகி வருகிறது.

    எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் போதை காளான், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் போதை விற்பனை செய்வதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகர எல்லையில் வீடு ஒன்றை குடோனாக வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சு ரேஷ்முருகன் மற்றும் போலீசார் சிதம்பரம் 1-வது வார்டு சிங்காரத்தோப்பு பகுதியில் கண்ணுசாமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் 277 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழகன் டி.மண்டபம் துணிச்சிலமேடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் அருண்குமார் (34), சிதம்பரம் அருகே ஓமக்குளம் ஜமால்நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா அப்பாஸ்அலி (42), புவனகிரி அருகே உள்ள வடக்குஆதிவராகநத்தம் வடக்கு மடவிளாக தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (35), சிதம்பரம் கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஜிஜந்தர்சிங் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கர்நாடகவில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே கடந்த 16-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 கார்களில் 4 டன் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் வளர்மதி,

    குட்கா கடத்தலில் ஈடுபட்ட வர்ஷிராம், பிருஷா ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

    • 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது
    • காருடன் ஒருவர் கைது

    வெம்பாக்கம்:

    தூசி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் தடை செய்யப்பட்ட போதைபொருட்களை 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து

    ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜே.ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் பகுதியில், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கார்களை போலீசார் நிறுத்த முயன்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கார்களில் சோதனை செய்தனர். அதில் தலா 2 டன் என மொத்தம் 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களுடன் கார்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், பட்டோலி பகுதியை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருசா(22) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
    • முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம் வர வேற்றார். கூட்டத்தில் பொருளாளரும், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞ ருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் தொடக்க உரைரையாற்றினார். சட்ட ஆலோசகரும், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான சேக் இப்ராகிம் சட்ட சம்பந்தமாக பேசினார்.

    கூட்டத்தில் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் செய்யது காசீம், மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணைத்தலைவர் மாணிக்கம் இரங்கல் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதை போலீசார் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    போதை பொருட்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மீள சமூக, சமுதாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட கீழக்கரை மீன் மார்க்கெட், பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் இந்த கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது கீழக்கரை தாலுகாவாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கீழ்க்கரை நகராட்சி பகுதி யில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் நகரில் இருந்து தொலைதூரம் அமைந்து இருப்பதால் அதை கீழக்கரை தாலுகா வளா கத்தில் கட்ட அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு தொலை தூர பஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முஹம்மது பாதுஷா, ஹுசைன் அல்லா பக்ஸ், சீனி பாபா பக்ருதீன், ஹசன் பாய்ஸ், சீனி முஹம்மது சேட், பவுசுல் அமீன், அபு பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.

    • திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கெடிலம் கூட்ரோட்டில் நடைபெறற இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், பசவராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

    • போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் தீவிரமாக கண்காணித்த போது நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்னை வந்த நைஜீரிய நாட்டு வாலிபர் ஆரோன் பெல் (30), என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு உரிய வேலை இல்லாததால் மனைவியின் சம்பளத்தில் பெங்களூருவில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

    மேலும் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பெங்களூருவில் இருந்து கொக்கைனை (போதை பொருள்) மொத்தமாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே தங்கி இருக்கும் சாமுவேல் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை சாமுவேல் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர் சாமுவேலையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×