search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள்விழிப்புணர்வு"

    • ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.

    • பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.
    • பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி- வடக்குத்தி லுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்சி . ஆர். ஜெயசங்கர் மற்றும் பள்ளிகளின் இயக்குநர் என். எஸ். தினேஷ் ஆகி யோரின் வழிகாட்டுதலின் பேரில் ஓசோன் படலம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வையும் , ஓசோனின் நன்மைகளை யும், ஓசோன் படலத்தை நாம் பாதுகாக்காவிட்டால் மக்களாகிய நமக்கு ஏற்படும் தீமைகளையும் தெருக்கூத்து நாடகமாகவும் , வில்லுப்பாட்டு வடிவிலும் நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள கோல்டன் ஜூப்ளி பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்றுவ தோடு, மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினர்.

    மேலும்,ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனி தர்களையும், விலங்கு களையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். என்பதனை தெருக்கூத்து நாடக வடிவில் மிக அழகாக எடுத்துரைத்தனர். மேலும், வில்லுப்பாட்டின் மூலம், குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்த்தாலே நாம் ஓசோன் சேதமடைவதை பாதி நிறுத்தி விடலாம். இதற்கு தடை விதித்த போதிலும், பல நாடுகளில் இன்றும் இதை பயன்படுத்தி க்கொண்டு தான் உள்ளனர். இதை தடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். என்பன போன்ற சிறந்த செய்திகளை எடுத்துரைத்தனர்.

    இளம் வயதிலேயே ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்களின் இத்தகைய பொதுநல சேவையைச், சுற்றுச்சூழல் மீதான அக்கறையை, நெய்வேலி டவுன்ஷிப்பி லுள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.இதற்கான ஏற்பாடு களைப் பள்ளியின் செயலாளர் சிந்து,பள்ளி முதல்வர்பிந்து, நிர்வாக மேலாளர்ச ரண்யா ,அழகுவேல், நடிப்பு கலை பேராசிரியர் பாலா மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

    ×